» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வைகுண்டபதி பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு: திரளான பக்தர்கள் தரிசனம்!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 3:55:28 PM (IST)
மாசி மாதப் பிறப்பு மற்றும் விஷ்ணுபதி புண்ணிய காலத்தை முன்னிட்டு, தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோவிலில் இன்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பழமையான அருள்மிகு வைகுண்டபதி பெருமாள் பெருமாள் கோவிலில் மாசி மாதப் பிறப்பை முன்னிட்டு விஷ்ணுபதி புண்ணிய காலத்தை ஒட்டி, வைகுண்டபதி பெருமாள் ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் "ராஜ அலங்காரத்தில்" எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளித்தார். இன்று காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் பெருமாளை வழிபட்டனர்.
விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் பெருமாளை 27 முறை சுற்றி வந்து வழிபட்டால், வாழ்வில் அனைத்து வளங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். அதன்படி, ஏராளமான பக்தர்கள் கோவிலை 27 முறை சுற்றி வந்து தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தினர். மாசி மாதப் பிறப்பை ஒட்டி நடைபெற்ற இந்த வழிபாட்டில், தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஸ்மார்ட் கார்டுகளில் திருத்தம் செய்ய நாளை சிறப்பு முகாம் : ஆட்சியர் தகவல்
வெள்ளி 13, பிப்ரவரி 2026 4:18:25 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் ரூ. 784 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகள்: அமைச்சர் கீதா ஜீவன் தகவல்!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 4:12:09 PM (IST)

தூத்துக்குடியில் தூய்மைப் பணியாளர் மீது தாக்குதல் : காவல் நிலையம் முற்றுகை!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 4:02:32 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட எஸ்பி சிலம்பரசன் மாற்றம் : புதிய எஸ்பியாக மதன் நியமனம்!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 3:24:31 PM (IST)

பாஞ்சாலங்குறிச்சி கோட்டை சாலைகளைச் சீரமைக்க வேண்டும்: எம்.எல்.ஏவிடம் ஆலயக் குழுவினர் மனு!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 3:12:04 PM (IST)

தோட்டத்தில் பதுங்கியிருந்த 5 அடி நீள நல்ல நல்ல பாம்பு: தீயணைப்பு வீரர்கள் மீட்பு
வெள்ளி 13, பிப்ரவரி 2026 12:32:33 PM (IST)










