» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வைகுண்டபதி பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு: திரளான பக்தர்கள் தரிசனம்!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 3:55:28 PM (IST)
மாசி மாதப் பிறப்பு மற்றும் விஷ்ணுபதி புண்ணிய காலத்தை முன்னிட்டு, தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோவிலில் இன்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பழமையான அருள்மிகு வைகுண்டபதி பெருமாள் பெருமாள் கோவிலில் மாசி மாதப் பிறப்பை முன்னிட்டு விஷ்ணுபதி புண்ணிய காலத்தை ஒட்டி, வைகுண்டபதி பெருமாள் ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் "ராஜ அலங்காரத்தில்" எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளித்தார். இன்று காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் பெருமாளை வழிபட்டனர்.
விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் பெருமாளை 27 முறை சுற்றி வந்து வழிபட்டால், வாழ்வில் அனைத்து வளங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். அதன்படி, ஏராளமான பக்தர்கள் கோவிலை 27 முறை சுற்றி வந்து தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தினர். மாசி மாதப் பிறப்பை ஒட்டி நடைபெற்ற இந்த வழிபாட்டில், தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு : வேட்பாளர் தீவிரப் பிரச்சாரம் தொடக்கம்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:01:01 PM (IST)

தூத்துக்குடியில் இதுவரை 67 லட்சம் ரொக்கம் மற்றும் மதுபானங்கள் பறிமுதல்: ஆட்சியர் தகவல்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:15:14 PM (IST)

கூட்டுறவு வங்கி மோசடி விவகாரம்: அமைச்சரின் பிரசாரம் ரத்து - தேர்தலை புறக்கணிப்பதாக மக்கள் அறிவிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:06:15 PM (IST)

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கீதா ஜீவன் பிரச்சாரம் : 53 மற்றும் 54-வது வார்டுகளில் ஆதரவு திரட்டினார்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 1:35:41 PM (IST)

தூத்துக்குடியில் ஈஸ்டர் பெருவிழா சிறப்பு திருப்பலி : ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:08:37 PM (IST)

மக்களின் ஒருவனாகச் சேவையாற்றுவேன்: திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் தீவிர வாக்கு சேகரிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:04:01 PM (IST)







