» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தோட்டத்தில் பதுங்கியிருந்த 5 அடி நீள நல்ல நல்ல பாம்பு: தீயணைப்பு வீரர்கள் மீட்பு

வெள்ளி 13, பிப்ரவரி 2026 12:32:33 PM (IST)



தூத்துக்குடி அருகே தோட்டத்தில் பதுங்கியிருந்த 5 அடி நீள நல்ல பாம்பை தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பாகப் பிடித்தனர்.

தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டையை அடுத்த நம்பிக்கை மீண்டான் கிராமம், இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன். இன்று இவரது வீட்டின் தோட்டத்தில் பாம்பு ஒன்று புகுந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக சிப்காட் தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தார்.

நிலைய அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தோட்டத்தில் பதுங்கியிருந்த சுமார் 5 அடி நீளமுள்ள நல்ல பாம்பை லாகவமாகப் பிடித்தனர். பிடிபட்ட பாம்பு பின்னர் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, வனப்பகுதியில் பாதுகாப்பாக விடப்பட்டது. தீயணைப்பு வீரர்களின் இந்த துரித நடவடிக்கையைப் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




CSC Computer Education

Arputham Hospital





Thoothukudi Business Directory