» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கடலில் சங்குகுளிக்க சென்ற வாலிபர் திடீர் மரணம் : போலீஸ் விசாரணை!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 12:04:50 PM (IST)
தூத்துக்குடியில் கடலில் சங்குகுளிக்க சென்ற வாலிபர் திடீரென உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி திரேஸ்புரம் மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் லட்சுமணன் மகன் பொன் முனீஸ்வரன் (32), சங்குகுளி தொழிலாளியான இவர் நேற்று படகில் சக தொழிலாளர்கள் 5 பேருடன் கடலுக்குள் சங்கு குளிக்க சென்றார். பின்னர் அவர்கள் கரை திரும்பும் போது பொன் முனீஸ்வரனுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.
உடனடியாக சக தொழிலாளர்கள் அவரை திரேஸ்புரம் கடற்கரைக்கு வந்து பின்னர், பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். பின்னர் அவரது உடல் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து வடபாகம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் தூய்மைப் பணியாளர் மீது தாக்குதல் : காவல் நிலையம் முற்றுகை!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 4:02:32 PM (IST)

வைகுண்டபதி பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு: திரளான பக்தர்கள் தரிசனம்!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 3:55:28 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட எஸ்பி சிலம்பரசன் மாற்றம் : புதிய எஸ்பியாக மதன் நியமனம்!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 3:24:31 PM (IST)

பாஞ்சாலங்குறிச்சி கோட்டை சாலைகளைச் சீரமைக்க வேண்டும்: எம்.எல்.ஏவிடம் ஆலயக் குழுவினர் மனு!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 3:12:04 PM (IST)

தோட்டத்தில் பதுங்கியிருந்த 5 அடி நீள நல்ல நல்ல பாம்பு: தீயணைப்பு வீரர்கள் மீட்பு
வெள்ளி 13, பிப்ரவரி 2026 12:32:33 PM (IST)

மகளிர் உரிமைத் தொகை ரூ.2ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்: அமைச்சர் கீதாஜீவன் பேட்டி
வெள்ளி 13, பிப்ரவரி 2026 11:32:02 AM (IST)










