» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மகளிர் உரிமைத் தொகை ரூ.2ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்: அமைச்சர் கீதாஜீவன் பேட்டி
வெள்ளி 13, பிப்ரவரி 2026 11:32:02 AM (IST)

திராவிட மாடல் ஆட்சி தொடரும், மகளிர் உரிமைத் தொகை ரூ.2ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.
மகளிர் உரிமைத் தொகையாக ரூ. 5,000 இன்று காலை வரவு வைக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பிப்ரவரி மாதத்துக்கான ரூ.1,000 பணத்துடன், மார்ச், ஏப்ரல் ஆகிய மாதங்களுக்கு முன்பணமாக ரூ.2,000 மற்றும் கோடைக்கால சிறப்பு தொகுப்பாக ரூ. 2,000 என மொத்தம் ரூ. 5,000 வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் முதல்வரின் அறிவிப்பை வரவேற்று தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவன் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், "முதல்வரின் அறிவிப்பு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. உழைக்கும் மகளிருக்கான உரிமைத் தொகையை தேர்தல் வாக்குறுதிப்படி 2ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். விடுபட்டவர்களுக்கு உங்களுடன் ஸ்டாலின் முகாமில் முறையீடு செய்யலாம். மீண்டும் திராவிட மாடல் ஆட்சி தொடரும், மீண்டும் ஸ்டாலின் முதல்வராவார் என்று தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் தூய்மைப் பணியாளர் மீது தாக்குதல் : காவல் நிலையம் முற்றுகை!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 4:02:32 PM (IST)

வைகுண்டபதி பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு: திரளான பக்தர்கள் தரிசனம்!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 3:55:28 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட எஸ்பி சிலம்பரசன் மாற்றம் : புதிய எஸ்பியாக மதன் நியமனம்!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 3:24:31 PM (IST)

பாஞ்சாலங்குறிச்சி கோட்டை சாலைகளைச் சீரமைக்க வேண்டும்: எம்.எல்.ஏவிடம் ஆலயக் குழுவினர் மனு!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 3:12:04 PM (IST)

தோட்டத்தில் பதுங்கியிருந்த 5 அடி நீள நல்ல நல்ல பாம்பு: தீயணைப்பு வீரர்கள் மீட்பு
வெள்ளி 13, பிப்ரவரி 2026 12:32:33 PM (IST)

கடலில் சங்குகுளிக்க சென்ற வாலிபர் திடீர் மரணம் : போலீஸ் விசாரணை!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 12:04:50 PM (IST)











விஜய் ரசிகன்Feb 13, 2026 - 12:30:43 PM | Posted IP 104.2*****