» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறும்; ஆட்சியில் பங்கு கோரிக்கை எடுபடாது: வைகோ
வெள்ளி 13, பிப்ரவரி 2026 7:50:12 AM (IST)
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும், அப்போது கூட்டணிக் கட்சிகளின் ஆட்சியில் பங்கு கோரிக்கைகள் எடுபடாது என்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் மேலும் கூறியதாவது: "கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு கருத்தைக் கூறி வருகின்றன. ஆட்சியில் பங்கு வேண்டும், அதிக இடங்கள் வேண்டும் என்று கேட்பது அந்தந்தக் கட்சிகளின் உரிமை. ஆனால், மதிமுக கடந்த நான்கரை ஆண்டு காலத்தில் இது போன்ற எந்தவித நிபந்தனைகளையும் விதித்தது இல்லை.
வரும் தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும். அந்தச் சூழலில், கூட்டணிக் கட்சிகளின் இத்தகைய கோரிக்கைகள் ஏற்கப்படாது. திமுகவின் ஈட்டி முனையாக மதிமுக என்றும் திகழும்." "மதிமுக சோர்வடைந்துவிடவில்லை என்பதை மெய்ப்பிக்கும் வகையில், திருச்சியிலிருந்து மதுரை வரை 180 கி.மீ. தொலைவு நடைப்பயணம் மேற்கொண்டு பல லட்சம் மக்களைச் சந்தித்து வருகிறேன்.
அதேவேளையில், 'வந்தே மாதரம்' பாடல் முழுமையாகப் பாடப்பட வேண்டும் என்ற சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
இந்தச் சந்திப்பின் போது, மதிமுக துணைப் பொதுச்செயலாளர் தி.மு. ராஜேந்திரன், தூத்துக்குடி மாவட்டச் செயலாளர்கள் ஆர்.எஸ். ரமேஷ் (வடக்கு), ரஞ்சன் (தெற்கு), மாநில ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினர் விநாயகா ஜி. ரமேஷ் மற்றும் கட்சியின் ஒன்றிய, நகர நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
முன்னதாக, கோவில்பட்டி அருகே இலுப்பையூரணியைச் சேர்ந்த நஸ்ரின் நிஷா என்பவர் வைகோவைச் சந்தித்து மனு ஒன்றை அளித்தார். அதில், மலேசியாவுக்கு வேலைக்குச் சென்று காணாமல் போன தனது கணவர் பாபுவை மீட்டுத் தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு : வேட்பாளர் தீவிரப் பிரச்சாரம் தொடக்கம்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:01:01 PM (IST)

தூத்துக்குடியில் இதுவரை 67 லட்சம் ரொக்கம் மற்றும் மதுபானங்கள் பறிமுதல்: ஆட்சியர் தகவல்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:15:14 PM (IST)

கூட்டுறவு வங்கி மோசடி விவகாரம்: அமைச்சரின் பிரசாரம் ரத்து - தேர்தலை புறக்கணிப்பதாக மக்கள் அறிவிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:06:15 PM (IST)

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கீதா ஜீவன் பிரச்சாரம் : 53 மற்றும் 54-வது வார்டுகளில் ஆதரவு திரட்டினார்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 1:35:41 PM (IST)

தூத்துக்குடியில் ஈஸ்டர் பெருவிழா சிறப்பு திருப்பலி : ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:08:37 PM (IST)

மக்களின் ஒருவனாகச் சேவையாற்றுவேன்: திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் தீவிர வாக்கு சேகரிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:04:01 PM (IST)







