» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூர் கோயில் மாசித் திருவிழா 21ம் தேதி தொடக்கம்: மார்ச் 2ல் தேரோட்டம்!

வியாழன் 12, பிப்ரவரி 2026 8:29:48 AM (IST)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மாசித் திருவிழா வருகிற 21ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் மார்ச் 2ஆம் தேதி நடைபெற உள்ளது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் முக்கியத் திருவிழாக்களில் ஒன்றான மாசித் திருவிழா, பிப்ரவரி 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவை முன்னிட்டு பிப். 20ம் தேதி மாலையில் யானை மீது கொடிப்பட்ட வீதியுலா நடக்கிறது. பிப். 21 (சனிக்கிழமை) அதிகாலை 1 மணிக்கு நடைதிறப்பு, காலை 5 மணிக்கு கொடியேற்றம் நடைபெறுகிறது. 

பிப். 25 (5-ஆம் திருவிழா) இரவு குடைவரைவாயில் தீபாராதனை நடைபெறுகிறது. பிப். 27 (7-ஆம் திருவிழா) சண்முகபெருமானின் உருகு சட்டசேவை மற்றும் மாலை சிவ அம்சம் (சிவப்பு சாத்தி) கோலத்தில் வீதியுலா நடைபெறுகிறது. பிப். 28 (8-ஆம் திருவிழா) காலை பிரம்மா அம்சம் (வெள்ளை சாத்தி) மற்றும் மதியம் விஷ்ணு அம்சம் (பச்சை சாத்தி) கோலத்தில் வீதியுலா நடைபெறுகிறது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் மார்ச் 2ஆம் தேதி நடைபெற உள்ளது. மார்ச் 3ல் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. மார்ச் 4ம் தேதி திருவிழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளைத் தக்கார் ரா. அருள்முருகன் மற்றும் இணை ஆணையர் க. ராமு உள்ளிட்ட கோயில் பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital






Thoothukudi Business Directory