» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்: தொழிற்சங்கங்களின் போராட்டத்திற்கு ஆதரவு

வியாழன் 12, பிப்ரவரி 2026 8:24:56 AM (IST)



மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் விவசாயிகள் விரோதக் கொள்கைகளைக் கண்டித்து தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள பொது வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, தூத்துக்குடியில் வங்கி ஊழியர்கள் நேற்று எழுச்சிமிகு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய பாரதிய ஜனதா அரசின் தொழிலாளர் நலன் பாதிக்கும் சட்டங்கள், விவசாயிகள் விரோதப் போக்கு மற்றும் 100 நாள் வேலைத் திட்டப் பெயர் மாற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகளைக் கண்டித்து இன்று (வியாழக்கிழமை) ஒரு நாள் நாடு தழுவிய பொது வேலைநிறுத்தப் போராட்டத்திற்குத் தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.

இதனைத் தொடர்ந்து, இந்த வேலைநிறுத்தப் போராட்டத்திற்குத் தனது ஆதரவைத் தெரிவிக்கும் வகையில், தூத்துக்குடி தெற்கு கடற்கரை சாலையில் (பீச் ரோடு) உள்ள கனரா வங்கி கிளை முன்பாக நேற்று மாலை வங்கி ஊழியர்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வங்கி ஊழியர் சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி இந்த ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை தாங்கினார். நகர வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் சக்திவேல், ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசின் கொள்கைகளை விமர்சித்தும் உரையாற்றினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி நகர வங்கி ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த திரளான ஊழியர்கள் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர். இன்று நடைபெறும் பொது வேலைநிறுத்தப் போராட்டத்தில் வங்கி ஊழியர்கள் முழுமையாகப் பங்கேற்பார்கள் என்றும், இதனால் வங்கிச் சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து

muthuFeb 12, 2026 - 01:27:28 PM | Posted IP 104.2*****

போராட்டத்தில் ஈடுபட்டால் இரண்டு நாள் சம்பளம் பிடிக்கப்படும் என்று அரசு அறிவித்தால் போதும் யாரும் போராட்டத்தில் ஈடுபடமாட்டார்கள்.

thamilanFeb 12, 2026 - 01:14:45 PM | Posted IP 172.7*****

பத்தாயிரம் பதினைந்து ஆயிரம் சம்பளத்திற்கு படாத பாடு படுகிறான் ஒவ்வொரு மனிதனும். ஆனால் போராட்டம் செய்வதே வேலையாகிவிட்டது.

BabuFeb 12, 2026 - 10:45:05 AM | Posted IP 172.7*****

iyya intha 50 vayasuku mela irukuravangala vrs kuduthu anupirunga ivanga ipo velaiku seravangalayum senthu keduthuranga bank ku vantha mugam sulikama palaya alukal yaru velai seiranga varathe velai seiya atha seiyama sampalam venum nu porattam nadakum intha above 50 yellam velaya viu anupitave bank oluga nadakum puthusa varavangalum ivangala pathu apuram porattam than yepavume nadakum pola

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital





Thoothukudi Business Directory