» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கோவில்பட்டியில் கஞ்சா விற்பனை: பிளஸ்-2 மாணவர் கைது
வியாழன் 12, பிப்ரவரி 2026 8:08:03 AM (IST)
கோவில்பட்டி பசுவந்தனை சாலையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 17 வயது சிறுவனைப் போலீசார் கைது செய்து கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனர்.
கோவில்பட்டியில் கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் சந்தனமாரி தலைமையிலான போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள கோயில் அருகே சந்தேகத்திற்குரிய வகையில் நின்றிருந்த சிறுவனை விசாரித்தபோது, அவன் போலீசாரைப் பணி செய்ய விடாமல் தடுத்து அவதூறாகப் பேசியுள்ளான்.
இதையடுத்து அவனைச் சோதனையிட்டபோது, அவனிடம் 100 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அச்சிறுவன் பிளஸ்-2 படித்து வருவது தெரியவந்தது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அச்சிறுவனை நெல்லை கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு : வேட்பாளர் தீவிரப் பிரச்சாரம் தொடக்கம்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:01:01 PM (IST)

தூத்துக்குடியில் இதுவரை 67 லட்சம் ரொக்கம் மற்றும் மதுபானங்கள் பறிமுதல்: ஆட்சியர் தகவல்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:15:14 PM (IST)

கூட்டுறவு வங்கி மோசடி விவகாரம்: அமைச்சரின் பிரசாரம் ரத்து - தேர்தலை புறக்கணிப்பதாக மக்கள் அறிவிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:06:15 PM (IST)

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கீதா ஜீவன் பிரச்சாரம் : 53 மற்றும் 54-வது வார்டுகளில் ஆதரவு திரட்டினார்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 1:35:41 PM (IST)

தூத்துக்குடியில் ஈஸ்டர் பெருவிழா சிறப்பு திருப்பலி : ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:08:37 PM (IST)

மக்களின் ஒருவனாகச் சேவையாற்றுவேன்: திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் தீவிர வாக்கு சேகரிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:04:01 PM (IST)







