» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நாலுமாவடியில் மகளிர் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்

புதன் 11, பிப்ரவரி 2026 8:17:32 PM (IST)



நாலுமாவடியில் புதுவாழ்வு சங்கம் சார்பில் மகளிர் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடந்தது.

இயேசு விடுவிக்கிறார் புதுவாழ்வு சங்கம் சார்பில் நாலுமாவடியில் மகளிர் திறன் மேம்பாட்டுப பயிற்சி முகாம் துவக்க விழா நடந்தது. இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி லாசரஸ் தலைமை வகித்து முகாமை துவக்கி வைத்து பேசினார். ஆழ்வை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜன், அண்டோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். இயேசு விடுவிக்கிறார் சமூக சேவை ஒருங்கிணைப்பாளர் மணத்தி எட்வின் வரவேற்றார். தமிழ்நாடு மகளிர் சிறு குறு தொழில் முனைவோர் சங்க தலைவர் கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் பயிற்சி முகாம் மற்றும் அதன் பயன்கள் குறித்து பேசினார்.

முகாமில் ஆழ்வை யூனியனுக்குட்பட்ட அங்கமங்கலம், புறையூர், புன்னக்காயல், ஆத்தூர், புறையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியை சேர்ந்த மகளிர் சுயஉதவிக்குழுவை சேர்ந்த பெண்கள் மற்றும் கிராமப்புற மகளிர்கள் கலந்து கொண்டனர். இந்த முகாமில் காளான் வளர்ப்பு, மெழுகுவர்த்தி, கப் சாம்பிராணி, துணி பை, வயர்கூடை, பொம்மை, கேக், பிஸ்கட், ஆரி ஒர்க், தையல் உள்ளிட்ட பல்வேறு தொழில் தொடர்பான பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. ஏற்பாடுகளை இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவன பொதுமேலாளர் செல்வக்குமார் தலைமையில் மக்கள் தொடர்பு அலுவலர் சாந்தகுமார் மற்றும் ஜெபக்குழுவினர் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital





Thoothukudi Business Directory