» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
குடியிருப்பிற்குள் புகுந்த 5 அடி நீள சாரைப்பாம்பு மீட்பு
புதன் 11, பிப்ரவரி 2026 5:41:54 PM (IST)

தூத்துக்குடியில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த 5 அடி நீள சாரைப்பாம்பை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.
தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை, நடுக்கூட்டுடன் காடு கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்ச்சாமி. இவரது இல்லத்தின் நடுத் தெருவில் அமைந்துள்ள குடியிருப்பிற்குள் இன்று எதிர்பாராத விதமாகப் பாம்பு ஒன்று புகுந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், உடனடியாக சிப்காட் தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், சிப்காட் நிலைய அலுவலர் த. கார்த்திகேயன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
வீட்டின் பின்புறம் தண்ணீர் பிடித்து வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் ட்ரம்முக்கு அடியில் பதுங்கியிருந்த சுமார் 5 அடி நீளமுள்ள சாரைப் பாம்பை தீயணைப்பு வீரர்கள் லாகவமாகப் பிடித்தனர். பிடிபட்ட பாம்பைப் பாதுகாப்பாகச் சாக்குப்பையில் அடைத்த வீரர்கள், பின்னர் அதனை அடர்ந்த வனப்பகுதிக்குக் கொண்டு சென்று விடுவித்தனர். தீயணைப்பு வீரர்களின் இந்தத் துரித நடவடிக்கையைப் பொதுமக்கள் பாராட்டினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சமூக ஆர்வலர் வழக்கறிஞர் மணப்பாடு கயஸ் காலமானார்
புதன் 11, பிப்ரவரி 2026 10:29:35 PM (IST)

பைக் ஷோரூமுக்குள் புகுந்த மரநாய் மீட்பு!
புதன் 11, பிப்ரவரி 2026 9:16:51 PM (IST)

தனியார் மின் நிலையத்தை முற்றுகையிட்டு பா.ஜ.க போராட்டம்: போலீசார் குவிப்பு
புதன் 11, பிப்ரவரி 2026 9:11:02 PM (IST)

காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்: எஸ்பி பங்கேற்பு!
புதன் 11, பிப்ரவரி 2026 9:01:19 PM (IST)

தூத்துக்குடியில் 13ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் : ஆட்சியர் தகவல்!
புதன் 11, பிப்ரவரி 2026 8:48:19 PM (IST)

தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகம் புதிய மைல் கல்: ஐஜிபிசி சான்றிதழ்கள் பெற்று சாதனை!!
புதன் 11, பிப்ரவரி 2026 8:27:11 PM (IST)










