» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மனைவியுடன் தகராறு: கணவர் தற்கொலை!
புதன் 11, பிப்ரவரி 2026 11:22:05 AM (IST)
தூத்துக்குடியில் மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறின் காரணமாக கணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி தாளமுத்து நகர் எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்தவர் கோவிந்தன் மகன் நவநீத கிருஷ்ணன் (30), கூலித் தொழிலாளி. இவருக்கு நந்தினி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். நவநீதகிருஷ்ணன் நாள்தோறும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்ததால், கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
நேற்று இரவு வழக்கம்போல் ஏற்பட்ட தகராறினால் மனவேதனை அடைந்த நவநீதகிருஷ்ணன், தனது படுக்கையறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்துத் தகவலறிந்த தாளமுத்து நகர் காவல் நிலைய ஆய்வாளர் அருளப்பன் மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்குச் சென்று உடலைக் கைப்பற்றி பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு : வேட்பாளர் தீவிரப் பிரச்சாரம் தொடக்கம்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:01:01 PM (IST)

தூத்துக்குடியில் இதுவரை 67 லட்சம் ரொக்கம் மற்றும் மதுபானங்கள் பறிமுதல்: ஆட்சியர் தகவல்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:15:14 PM (IST)

கூட்டுறவு வங்கி மோசடி விவகாரம்: அமைச்சரின் பிரசாரம் ரத்து - தேர்தலை புறக்கணிப்பதாக மக்கள் அறிவிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:06:15 PM (IST)

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கீதா ஜீவன் பிரச்சாரம் : 53 மற்றும் 54-வது வார்டுகளில் ஆதரவு திரட்டினார்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 1:35:41 PM (IST)

தூத்துக்குடியில் ஈஸ்டர் பெருவிழா சிறப்பு திருப்பலி : ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:08:37 PM (IST)

மக்களின் ஒருவனாகச் சேவையாற்றுவேன்: திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் தீவிர வாக்கு சேகரிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:04:01 PM (IST)







