» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ரயில் மோதி ஒருவர் பலி: போலீசார் விசாரணை!

புதன் 11, பிப்ரவரி 2026 11:18:18 AM (IST)

மணியாச்சி - கடம்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே, சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண்  ரயில் மோதி உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம், மணியாச்சி - கடம்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே, நேற்று மாலை சுமார் 5:45 மணியளவில், நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் நோக்கிச் சென்ற ரயில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் பலத்த காயமடைந்த அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அந்த நபருக்கு சுமார் 55 வயது இருக்கும். முகம் சிதைந்துள்ளதால் அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இவரது வயிற்றுப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்த தழும்பு உள்ளது. நீல நிற முழுக்கை சட்டை, காபி நிற அரைக்கால் சட்டை மற்றும் அதன் மேல் வெள்ளை நிற வேட்டி அணிந்துள்ளார்.

இது குறித்து தூத்துக்குடி ரயில்வே காவல் உதவி ஆய்வாளர் எம். மகாகிருஷ்ணன் மற்றும் காவலர் செல்வம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது உயிரிழந்தவரின் உடல் அடையாளம் காண்பதற்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital






Thoothukudi Business Directory