» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அரசுப் பேருந்து மோதி 3 வயதுச் சிறுவன் பலி : திருவிழாவிற்கு வந்த போது சோகம்!
புதன் 11, பிப்ரவரி 2026 8:15:06 AM (IST)
புளியம்பட்டி அந்தோணியார் கோவில் திருவிழாவிற்கு வந்த 3 வயதுச் சிறுவன், பேருந்து மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், மானூர் அருகே உள்ள கட்டாரங்குளத்தைச் சேர்ந்த பிரின்ஸ் என்பவரின் மகன் ராபின் (3). இவர்கள் புளியம்பட்டி அந்தோணியார் கோவில் திருவிழாவிற்கு குடும்பத்துடன் வந்துள்ளனர். திருவிழா முடிந்து ஊர் திரும்புவதற்காகப் பேருந்து நிலையத்தில் காத்திருந்தபோது, பின்நோக்கி வந்த அரசுப் பேருந்து சிறுவன் மீது மோதியது.
சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். இது குறித்துப் புளியம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து, பேருந்து ஓட்டுநர் முத்துவேலிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு : வேட்பாளர் தீவிரப் பிரச்சாரம் தொடக்கம்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:01:01 PM (IST)

தூத்துக்குடியில் இதுவரை 67 லட்சம் ரொக்கம் மற்றும் மதுபானங்கள் பறிமுதல்: ஆட்சியர் தகவல்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:15:14 PM (IST)

கூட்டுறவு வங்கி மோசடி விவகாரம்: அமைச்சரின் பிரசாரம் ரத்து - தேர்தலை புறக்கணிப்பதாக மக்கள் அறிவிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:06:15 PM (IST)

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கீதா ஜீவன் பிரச்சாரம் : 53 மற்றும் 54-வது வார்டுகளில் ஆதரவு திரட்டினார்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 1:35:41 PM (IST)

தூத்துக்குடியில் ஈஸ்டர் பெருவிழா சிறப்பு திருப்பலி : ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:08:37 PM (IST)

மக்களின் ஒருவனாகச் சேவையாற்றுவேன்: திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் தீவிர வாக்கு சேகரிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:04:01 PM (IST)







