» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மியான்மரில் சிக்கிய தூத்துக்குடி இளைஞர்கள் மீட்பு : துரை வைகோ எம்பிக்கு நன்றி!
புதன் 11, பிப்ரவரி 2026 8:05:15 AM (IST)

கம்போடியாவிற்கு வேலைக்குச் சென்ற இடத்தில் கடத்தப்பட்டு, மியான்மரில் சித்திரவதைக்குள்ளான 3 தமிழர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
தூத்துக்குடி பெரியசாமி நகரைச் சேர்ந்த சித்திரை செல்வகுமார், நவீன்குமார் மற்றும் விருதுநகர் சிப்பிப்பாறையைச் சேர்ந்த மதன்ராஜ் ஆகிய மூவரும் கடந்த 11.10.2025 அன்று வேலைக்காக கம்போடியா சென்றனர். அவர்கள் தாய்லாந்து வழியாக மியான்மருக்கு கடத்தப்பட்டு, தீவிரவாதக் குழுக்களால் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுத்தப்பட்டுக் கொடுமைப்படுத்தப்பட்டனர்.
இது குறித்து துரை வைகோ எம்.பி.-யிடம் பெற்றோர்கள் முறையிட்டனர். அவர் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை நேரில் சந்தித்து மனு அளித்தார். இந்தியத் தூதரகத்தின் தொடர் முயற்சியால் மூவரும் மீட்கப்பட்டனர். ஊர் திரும்பிய இளைஞர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், துரை வைகோ எம்.பி.-யை நேரில் சந்தித்து தங்களது நெகிழ்ச்சியான நன்றியைத் தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு : வேட்பாளர் தீவிரப் பிரச்சாரம் தொடக்கம்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:01:01 PM (IST)

தூத்துக்குடியில் இதுவரை 67 லட்சம் ரொக்கம் மற்றும் மதுபானங்கள் பறிமுதல்: ஆட்சியர் தகவல்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:15:14 PM (IST)

கூட்டுறவு வங்கி மோசடி விவகாரம்: அமைச்சரின் பிரசாரம் ரத்து - தேர்தலை புறக்கணிப்பதாக மக்கள் அறிவிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:06:15 PM (IST)

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கீதா ஜீவன் பிரச்சாரம் : 53 மற்றும் 54-வது வார்டுகளில் ஆதரவு திரட்டினார்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 1:35:41 PM (IST)

தூத்துக்குடியில் ஈஸ்டர் பெருவிழா சிறப்பு திருப்பலி : ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:08:37 PM (IST)

மக்களின் ஒருவனாகச் சேவையாற்றுவேன்: திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் தீவிர வாக்கு சேகரிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:04:01 PM (IST)







