» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருவிழாவில் காணாமல் போன குழந்தை மீட்பு: பெற்றோரிடம் ஒப்படைப்பு!

செவ்வாய் 10, பிப்ரவரி 2026 8:18:44 PM (IST)



புளியம்பட்டி அந்தோணியார் கோவில் திருவிழாவில் கூட்ட நெரிசலில் தவித்த குழந்தையை மீட்டு போலீசார் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் புளியம்பட்டி புனித அந்தோணியார் திருத்தலத் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதால், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை. சிலம்பரசன் உத்தரவின் பேரில் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று திருவிழா கூட்ட நெரிசலில் பக்தர் ஒருவரின் குழந்தை பெற்றோரை பிரிந்து தனியாக நின்று அழுதுகொண்டிருந்தது. அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சாந்தகுமாரி மற்றும் போலீசார், அக்குழந்தையை பத்திரமாக மீட்டனர்.

உடனடியாக கோவில் வளாகத்தில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறைக்குக் குழந்தையை அழைத்துச் சென்று, ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்தனர். அதன் அடிப்படையில் விரைந்து வந்த பெற்றோரிடம் குழந்தை பத்திரமாக ஒப்படைக்கப்பட்டது. மனிதாபிமானத்துடன் விரைந்து செயல்பட்ட காவல் ஆய்வாளர் மற்றும் போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாகப் பாராட்டினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital





Thoothukudi Business Directory