» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

எல்லா பெண்களும் உயர்கல்வி பெற வேண்டும்: அமைச்சர் பி. கீதாஜீவன் பேச்சு!

செவ்வாய் 10, பிப்ரவரி 2026 4:03:07 PM (IST)



தமிழகத்தில் எல்லா பெண்களும் உயர்கல்வி பெற வேண்டும் என்ற வகையில் முதலமைச்சர்  செயல்பட்டு வருகிறார் என்று அமைச்சர் கீதாஜீவன் பேசினார். 

தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில், தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசளிப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் மாநில சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி. கீதாஜீவன் கலந்துகொண்டு உரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், அழிக்க முடியாத செல்வமான கல்வியை வழங்க வேண்டும் என்பதை இந்த திட்டத்தின் நோக்கம்,  தமிழகத்தில்  பெண்கள் கல்வி பெறவேண்டும், எல்லா பெண்களும் உயர் கல்வி பெற வேண்டும் என்ற வகையில் முதலமைச்சர்  செயல்பட்டு வருகிறார். பெண்கள் கல்வி அறிவு பெறுவதால் பல பெண்கள் தொழில் முனைவர்களாகவும் பலர் உருவாகி வருகின்றனர்.

தமிழகத்தில் புதுமைப்பெண் பெண் திட்டம்  போன்று எல்லா திட்டத்தையும் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. மகளிருக்கான ஆட்சி என்று சொல்லக்கூடிய அளவில் திட்டங்களை செயல்படுத்து வருகிறது. பெண் குழந்தைகளின் பாலின சமநிலையைப் பேணவும், பாதுகாப்பை உறுதி செய்யவும், உயர்கல்வியைக் கட்டாயமாக்கவும் இத்திட்டம் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குழந்தை திருமணம் மற்றும் இளம் வயது கர்ப்பத்தைத் தடுக்க, தூத்துக்குடியின் 56 பள்ளிகளில் ஓவியம் மற்றும் கட்டுரைப் போட்டிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

புதுமைப்பெண்' மற்றும் 'நான் முதல்வன்' போன்ற திட்டங்கள் மூலம், 2030-க்குள் தமிழகத்தை 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்தும் நோக்கில் பெண்கள் தொழில் முனைவோராக உருவாக்கப்பட்டு வருகின்றனர்  என்றார். இலவச தையல் இயந்திரங்கள், முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட நிதி மற்றும் சிறுதொழில் புரிய மானியத்துடன் கூடிய இயந்திரங்கள் வழங்கப்பட்டன.'

மாவட்ட ஆட்சித் தலைவர் கே. இளம்பகவத் பேசுகையில், "உயர்வுக்குப் படி" போன்ற திட்டங்கள் மூலம் நிதியுதவி வழங்கப்பட்டதால், தமிழகத்திலேயே தூத்துக்குடி மாவட்டத்தில் தான் அதிகளவிலான மாணவ-மாணவியர் உயர்கல்வியில் சேர்ந்துள்ளனர் எனத் தெரிவித்தார். குறிப்பாக, 12-ஆம் வகுப்பு முடித்த பெண்களில் 96 சதவீதம் பேர் கல்லூரிகளில் இணைந்து சாதனை படைத்துள்ளனர் என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital



Thoothukudi Business Directory