» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயில் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

செவ்வாய் 10, பிப்ரவரி 2026 11:29:03 AM (IST)



திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயிலில், மாசித் திருவிழா இன்று (பிப். 10) காலை கொடியேற்றத்துடன் வெகுவிமர்சையாகத் தொடங்கியது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் உபகோயிலான வெயிலுகந்தம்மன் கோயிலில், மாசித் திருவிழா இன்று (பிப். 10) காலை கொடியேற்றத்துடன் வெகுவிமர்சையாகத் தொடங்கியது. திருவிழாவை முன்னிட்டு, இன்று அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்குச் சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் நடைபெற்றன. தொடர்ந்து, திருவிழாக் கொடிப் பட்டமானது கோயிலிலிருந்து புறப்பட்டு ரத வீதிகள் மற்றும் மாட வீதிகள் வழியாக ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டது.

பின்னர் கோயிலை வந்தடைந்த கொடிப் பட்டத்திற்குப் பூஜைகள் செய்யப்பட்டு, காலை 5.30 மணியளவில் காப்பு கட்டிய சரவணன் வல்லவராயர் திருவிழாக் கொடியினை ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து கொடிமரத்திற்குச் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்காரங்கள் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது.

இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பத்து நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், நிறைவு நாளான பிப்ரவரி 19-ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital



Thoothukudi Business Directory