» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

234 தொகுதிகளிலும் மு.க.ஸ்டாலின் தான் வேட்பாளர் : தூத்துக்குடியில் சபரீசன் வேண்டுகோள்

செவ்வாய் 10, பிப்ரவரி 2026 10:20:07 AM (IST)



வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில், 234 தொகுதிகளிலும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினே வேட்பாளர் என்பதை மனதில் வைத்து உடன்பிறப்புகள் ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும் என முதலமைச்சரின் மருமகன் சபரீசன் தூத்துக்குடியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசினார்.

தமிழக முதலமைச்சர் மற்றும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், 2026 சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளார். இதற்காக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு மற்றும் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் அடங்கிய ஒருங்கிணைப்புக் குழு ஏற்கனவே அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் 234 தொகுதிகளுக்குமான தேர்தல் பார்வையாளர்களையும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்திருந்தார்.

தென் மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை தந்த சபரீசன், தூத்துக்குடியில் உள்ள தனியார் விடுதியில் வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார். இந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது: "கழகத் தலைமைக்கும், முதலமைச்சருக்கும் உறுதுணையாக இருந்து கட்சிப் பணிகளைச் செம்மையாகச் செய்ய வேண்டும். அரசின் மக்கள் நலத்திட்டங்களையும், கட்சியின் கொள்கைகளையும் மக்களிடம் கொண்டு சேர்த்து வாக்கு வங்கியை அதிகரிக்க வேண்டும்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று நாட்டிற்கே வழிகாட்டியது. அதேபோல், வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் 'தளபதி' தான் வேட்பாளர் என்ற எண்ணத்தோடு அனைவரும் ஒற்றுமையுடன் களப்பணியாற்ற வேண்டும். உழைப்புக்கு அங்கீகாரம்: "கட்சிக்காக உண்மையாக உழைப்பவர்களுக்கு நிச்சயம் நல்ல எதிர்காலம் அமையும்" என அவர் தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.

இந்தக் கூட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன், மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர்கள் மார்க்கண்டேயன், சண்முகையா மற்றும் ஒன்றிய செயலாளர்கள் இளையராஜா, ராமசாமி, சரவணக்குமார், காசிவிஸ்வநாதன் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





CSC Computer Education

Arputham Hospital




Thoothukudi Business Directory