» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நாசரேத் பொறியியல் கல்லூரி என்.எஸ்.எஸ். முகாம்

செவ்வாய் 10, பிப்ரவரி 2026 10:10:45 AM (IST)



நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பொறியியல் கல்லூரி என்.எஸ்.எஸ். முகாமில் தூத்துக்குடி நாசரேத் திருமண்டல மேலாளரும் கல்லூரி செயலருமான தேவா காபிரியேல் ரத்ததானம் செய்து முகாமை தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற நாட்டு நலப்பணித் திட்ட (என்.எஸ்.எஸ்) முகாம் நடைபெற்றது. இதில் ரத்ததானம் வழங்கும் நிகழ்ச்சியில் கல்லூரி செயலர் டாக்டர் தேவா காபிரியேல் ஜெபராஜன் கலந்து கொண்டு மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படும் வண்ணம் ரத்ததானம் செய்தார். தொடர்ந்து கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் உட்பட 100 பேர் ரத்ததானம் செய்தனர்.

இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ஆக்னஸ் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக நாசரேத் கிராம நிர்வாக அலுவலர் சிவராமன் கலந்து கொண்டார். கல்லூரி பேராசிரியர் ஸ்டான்லி ரத்ததான விழிப்புணர்வு குறித்து பேசினார். 

இந் நிகழ்ச்சியில் பாளையங்கோட்டை டக்கரம்மாள்புரம் ஜெயராஜ் அன்னபாக்கியம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் ஸ்மைலி, துணை முதல்வர் காட்டன் பிரபு, நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக கல்லூரியின் என்.எஸ்.எஸ். ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஞானசெல்வன் அனைவருக்கும் நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital






Thoothukudi Business Directory