» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ்-2 செய்முறை தேர்வுகள் தொடங்கியது!

செவ்வாய் 10, பிப்ரவரி 2026 8:26:20 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 207 பள்ளிளில் பிளஸ்-2 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் நேற்று (பிப்ரவரி 9) தொடங்கி நடைபெற்று வருகின்றன.

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு 8,906 மாணவர்கள் மற்றும் 10,882 மாணவிகள் என மொத்தம் 19,788 பேர் பிளஸ்-2 தேர்வு எழுத உள்ளனர். இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், உயிரியல், கம்ப்யூட்டர் அறிவியல், நர்சிங் மற்றும் ஆடிட்டிங் உள்ளிட்ட 11 பாடப்பிரிவுகளைப் பயிலும் மாணவர்களுக்கு இந்தச் செய்முறைத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சங்கீதா சின்னராணி தலைமையில், மாவட்ட கல்வி அலுவலர்கள் இந்தத் தேர்வுகளை நேரடியாகக் கண்காணித்து வருகின்றனர். மேலும், இதற்காகப் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தச் செய்முறைத் தேர்வுகள் வரும் பிப்ரவரி 14-ம் தேதி வரை தொடர்ந்து நடைபெறும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital




Thoothukudi Business Directory