» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சரக்கு வாகனத்தில் கடத்தி வந்த ரூ.16 லட்சம் பீடி இலைகள் பறிமுதல் - வாலிபர் கைது

செவ்வாய் 10, பிப்ரவரி 2026 8:06:14 AM (IST)

தூத்துக்குடி அருகே தடை செய்யப்பட்ட பீடி இலைகளை சரக்கு வாகனத்தில் கடத்தி வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.16 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் முருகன் தலைமையிலான போலீசார், நேற்று அதிகாலை சிறுப்பாடு பகுதியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சந்தேகத்திற்கிடமான சரக்கு வாகனம் ஒன்றை நிறுத்திச் சோதனையிட்டனர்.  அச்சோதனையில், அந்த வாகனத்தில் சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட 52 பண்டல் பீடி இலைகள் இருப்பது கண்டறியப்பட்டது. 

இதன் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் ரூபாய் 16 லட்சம் எனத் தெரிகிறது. இது தொடர்பாக வாகனத்தை ஓட்டி வந்த தூத்துக்குடியைச் சேர்ந்த சஞ்சய் குமார் (26) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனத்தையும், பீடி இலைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் குறித்து புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து, இந்த கடத்தலில் பின்னணியில் உள்ளவர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ரோந்து பணியின் போது துரிதமாகச் செயல்பட்டு, கடத்தல் கும்பலைப் பிடிதத்த புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் போலீசாரை, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை. சிலம்பரசன் வெகுவாகப் பாராட்டினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital



Thoothukudi Business Directory