» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தமிழகம் சீர்கெட்டு இருக்கிறது: வேலூர் இப்ராகிம் பேட்டி

செவ்வாய் 10, பிப்ரவரி 2026 7:50:23 AM (IST)

கொலை, கொள்ளை மற்றும் கஞ்சா புழக்கத்தால் தமிழகம் சீர்கெட்டு இருக்கிறது என பாஜக சிறுபான்மை அணி தேசியச் செயலாளர் வேலூர் இப்ராகிம் தெரிவித்தார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி: "மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்தால் தமிழகம் முன்னேறும் என்பதை வெளிப்படையாகச் சொல்லித் தொடர்ந்து பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகிறோம். ஐந்து ஆண்டுகளுக்கு முன் தேர்தல் பிரச்சாரத்தின்போது மு.க. ஸ்டாலின் எதையெல்லாம் சொன்னாரோ, அதையே வேறு வார்த்தைகளில் மறுபடியும் சொல்லத் தயாராகிக் கொண்டிருக்கிறார்.

ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிறார்கள். கடந்த நான்கே முக்கால் ஆண்டுகளில் செய்யாததை, இன்னும் இரண்டு மாதங்களில் முதல்வர் எப்படிச் செய்வார்? தூத்துக்குடியில் ரூ. 136 கோடியில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கொண்டு வர மத்திய அரசு 60 சதவீத நிதி கொடுத்துள்ளது. ஆனால், ஏற்கனவே இருந்த மகப்பேறு மருத்துவமனையையே சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மாற்றுகிறார்கள்.

தூத்துக்குடி, அருப்புக்கோட்டை, மதுரை வழியாக ரயில் சென்னை செல்வதற்கு மத்திய அரசு நிதி கொடுத்தும், அதற்கான நிலத்தைத் தமிழக அரசு ஒப்படைக்கவில்லை. பாஜகவின் நிலைப்பாடு தெளிவாக இருக்கிறது; அது மும்மொழிக் கொள்கைதான். மாநிலத்தில் உள்ள பெரும்பான்மை மக்கள் எதைத் தேர்ந்தெடுக்கிறார்களோ, அதுவே மூன்றாவது மொழியாக இருக்கும்," என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital





Thoothukudi Business Directory