» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தமிழக அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கை சாமானிய மக்களுக்கானது: சபாநாயகர் பேட்டி!

செவ்வாய் 10, பிப்ரவரி 2026 7:45:33 AM (IST)

தமிழக அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கை சாமானிய மக்களுக்கானதாக இருக்கும் என்று தமிழக சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பாவு தெரிவித்தார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் அவர் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: "தமிழக அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கை சாமானிய மக்களுக்கு நன்மை தரக்கூடியதாக இருக்கும். டிஎன்பிஎஸ்சி தேர்வு ஒத்திவைக்கப்பட்டது குறித்துத் தெளிவாகப் பதில் சொல்லப்பட்டுள்ளது. 

அது ஒரு தொழில்நுட்பக் கோளாறு. அப்பணியைச் சரியாகச் செய்யாத காரணத்தால் ஐஏஎஸ் அதிகாரி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த அரசு யார் தவறு செய்தாலும் நிச்சயமாகத் தண்டிக்கும்.

விஜய் ஒரு நடிகர் என்பதால் அவருக்கு ரசிகர் கூட்டம் இருக்கத்தான் செய்யும். எல்லா கட்சியிலும் அவரது ரசிகர்கள் இருப்பார்கள். அதற்காக அவர்கள் அனைவரும் அவருக்கு வாக்களிப்பார்கள் என்று சொல்லிவிட முடியாது. தமிழக முதல்வர் கடந்த ஐந்து ஆண்டுகளாகச் சாமானிய மக்களுக்காகச் சேவை செய்துள்ளார். மக்கள் நன்றியுடன் இருக்கிறார்கள்," என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital




Thoothukudi Business Directory