» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மணிமுத்தாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்க கோரிக்கை : ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் முற்றுகை!
திங்கள் 9, பிப்ரவரி 2026 12:12:48 PM (IST)

பயிர்கள் கருகும் அபாயம் உள்ளதால் மணிமுத்தாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக வசுவப்பனேரி, மீரான்குளம் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கருகிய பயிர்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் ஆட்சியரிடம் அளித்த மனுவில், "கடந்த ஆண்டு போதிய பருவமழை பெய்யாத காரணத்தினால், தூத்துக்குடி மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரங்களாக விளங்கும் குளங்கள் முழுமையாக நிரம்பவில்லை.
குறிப்பாக, வல்லகுளம், அரசர்குளம், பெருமால்குளம், மீரான்குளம், புதுக்குளம், வெட்டிகுளம், தேர்க்கன்குளம், கட்டாரிமங்கலம், அறிவான்மொழி பகுதிகளில் உள்ள குளங்கள் தற்போது வறண்டு காணப்படுகின்றன. குளங்களில் தண்ணீர் இல்லாததால், வாழ்வாதாரமாக நம்பியிருக்கும் வேளாண் பயிர்கள் அனைத்தும் தற்போது வாடிய நிலையில் உள்ளன.
நிலைமை இதேபோல் நீடித்தால், பயிர்கள் முற்றிலும் அழிந்து விவசாயிகளுக்குப் பெரும் நஷ்டமும், மன உளைச்சலும் ஏற்படும். ஆகையால் வேளாண் பயிர்களைக் காப்பாற்ற, மணிமுத்தாறு அணை 3-ஆவது ரீச் கால்வாய் வழியாக உடனடியாகத் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியரிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் ஏஐ சிறப்பு உச்சி மாநாடு!
திங்கள் 9, பிப்ரவரி 2026 8:21:32 PM (IST)

இளைஞர்களுக்கு திறன், வேலைவாய்ப்பு பயிற்சி : ஆட்சியர் க.இளம்பகவத் தகவல்!
திங்கள் 9, பிப்ரவரி 2026 5:46:27 PM (IST)

ஒருங்கிணைந்த காப்பக கட்டுப்பாட்டு வாரியம் அமைக்கப் பரிந்துரை - அமைச்சர் கீதா ஜீவனுக்கு நன்றி
திங்கள் 9, பிப்ரவரி 2026 5:08:10 PM (IST)

டாஸ்மாக் ஊழியர்கள் 3 மணி நேரக் கடையடைப்புப் போராட்டம் : மதுப்பிரியர்கள் திண்டாட்டம்!
திங்கள் 9, பிப்ரவரி 2026 4:51:03 PM (IST)

மக்கள் குறை களையும் நாள் கூட்டம் : ஆட்சியர் நலதிட்ட உதவிகளை வழங்கினார்!
திங்கள் 9, பிப்ரவரி 2026 4:38:48 PM (IST)

தகுதியற்ற நிலையில் உள்ள அரசுப் பேருந்தை மாற்ற நடவடிக்கை : ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை !
திங்கள் 9, பிப்ரவரி 2026 3:53:19 PM (IST)









