» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மூதாட்டியிடம் நகை பறிப்பு: திருநங்கை உள்பட 2பேர் கைது

திங்கள் 9, பிப்ரவரி 2026 8:08:38 AM (IST)

குரும்பூர் அருகே மூதாட்டியிடம் நகை பறித்த சம்பவத்தில் திருநங்கை உள்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகே உள்ள நெடுங்கரை மேலத்தெருவைச் சேர்ந்தவர் கந்தன். இவரது மனைவி புனிதா (60). இவர், சம்பவத்தன்று மாலை சேதுசுப்பிரமணியபுரத்தில் உள்ள கடையில் காய்கறி வாங்கிவிட்டு வீட்டுக்கு நடந்து வந்துகொண்டிருந்தார். நெடுங்கரை விலக்கு பகுதியில் அவர் சென்றபோது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், மூதாட்டியிடம் முகவரி கேட்பது போல நடித்து அவர் காதில் அணிந்திருந்த 2 கிராம் தங்கக் கம்மலைப் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த குரும்பூர் காவல் நிலையப் போலீஸார், தப்பியோடிய இருவரைத் தேடி வந்தனர். ஏரலை அடுத்த நட்டார் அம்மன் கோயில் அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரைப் பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில், அவர்கள் தூத்துக்குடி தாளமுத்துநகரைச் சேர்ந்த குமார் மகன் மாரிச்செல்வம் (18) என்பதும், தூத்துக்குடி மேல அலங்காரத்தட்டு பகுதியைச் சேர்ந்த திருநங்கை சஹானா என்ற ரிதன்யா (19) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, தங்க நகையைப் பறிமுதல் செய்த போலீஸார், இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திச் சிறையில் அடைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital




Thoothukudi Business Directory