» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தவறி விழுந்து ஒருவர் பலி!

திங்கள் 9, பிப்ரவரி 2026 8:01:43 AM (IST)

தூத்துக்குடி என்டிபிஎல் அனல்மின் நிலையத்தில் கட்டுமானப் பணியின்போது தவறி விழுந்து தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடி அனல்மின் நிலையப் பகுதியில், தனியாா் ஒப்பந்த நிறுவனம் மேற்கொண்டுவரும் கட்டுமானப் பணியில், மாப்பிள்ளையூரணி குமரன் நகா் பகுதியைச் சோ்ந்த ஜெயராஜ் (31), மனைவி ஹேமா, 2 குழந்தைகளுடன் தங்கியிருந்து வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் மாலை கட்டுமானப் பணியின்போது, ஜெயராஜ் சுமாா் 15 அடி உயரத்தில் இருந்து கீழே தவறி விழுந்ததில் தலையில் அடிபட்டு பலத்த காயமடைந்தாா்.

இதையடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இது தொடர்பாக தெர்மல் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital





Thoothukudi Business Directory