» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தவறி விழுந்து ஒருவர் பலி!
திங்கள் 9, பிப்ரவரி 2026 8:01:43 AM (IST)
தூத்துக்குடி என்டிபிஎல் அனல்மின் நிலையத்தில் கட்டுமானப் பணியின்போது தவறி விழுந்து தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி அனல்மின் நிலையப் பகுதியில், தனியாா் ஒப்பந்த நிறுவனம் மேற்கொண்டுவரும் கட்டுமானப் பணியில், மாப்பிள்ளையூரணி குமரன் நகா் பகுதியைச் சோ்ந்த ஜெயராஜ் (31), மனைவி ஹேமா, 2 குழந்தைகளுடன் தங்கியிருந்து வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் மாலை கட்டுமானப் பணியின்போது, ஜெயராஜ் சுமாா் 15 அடி உயரத்தில் இருந்து கீழே தவறி விழுந்ததில் தலையில் அடிபட்டு பலத்த காயமடைந்தாா்.
இதையடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இது தொடர்பாக தெர்மல் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு : வேட்பாளர் தீவிரப் பிரச்சாரம் தொடக்கம்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:01:01 PM (IST)

தூத்துக்குடியில் இதுவரை 67 லட்சம் ரொக்கம் மற்றும் மதுபானங்கள் பறிமுதல்: ஆட்சியர் தகவல்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:15:14 PM (IST)

கூட்டுறவு வங்கி மோசடி விவகாரம்: அமைச்சரின் பிரசாரம் ரத்து - தேர்தலை புறக்கணிப்பதாக மக்கள் அறிவிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:06:15 PM (IST)

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கீதா ஜீவன் பிரச்சாரம் : 53 மற்றும் 54-வது வார்டுகளில் ஆதரவு திரட்டினார்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 1:35:41 PM (IST)

தூத்துக்குடியில் ஈஸ்டர் பெருவிழா சிறப்பு திருப்பலி : ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:08:37 PM (IST)

மக்களின் ஒருவனாகச் சேவையாற்றுவேன்: திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் தீவிர வாக்கு சேகரிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:04:01 PM (IST)







