» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

எட்டயபுரத்தில் பாஜக தேர்தல் அறிக்கை வாகனம் : ராம சீனிவாசன் தொடங்கி வைத்தார்!

திங்கள் 9, பிப்ரவரி 2026 7:35:19 AM (IST)



எட்டயபுரத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பாஜக-வின் தேர்தல் அறிக்கை தயாரிப்புக்கான கருத்துக்கேட்பு வாகனத்தை அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பாஜக-வின் "மக்களுக்காக மக்களிடம் இருந்து" என்ற தேர்தல் அறிக்கை தயாரிப்புக்கான கருத்துக்கேட்பு வாகனத்தை அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

முன்னதாக, எட்டயபுரம் பாரதியார் மணிமண்டபத்தில் உள்ள மகாகவி பாரதியாரின் சிலைக்கு அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முக்கியப் பங்கேற்பாளர்கள்: வடக்கு மாவட்ட துணைத் தலைவர் ஆத்திராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நீகழ்வில், மாவட்டத் தலைவர் சரவணகிருஷ்ணன், ஒன்றிய தலைவர் சரவண குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராம்கி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விவசாய அணி தலைவர் ஜெய கண்ணன், இளைஞர் அணி தலைவர் பொன்ராஜ் உட்பட மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் இதில் கலந்து கொண்டனர். இந்த வாகனம் தொகுதி முழுவதும் சென்று பொதுமக்களின் கோரிக்கைகளை தேர்தல் அறிக்கைகாகச் சேகரிக்க உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital






Thoothukudi Business Directory