» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் தடுப்பு காவல் சட்டத்தில் 2பேர் கைது!
ஞாயிறு 8, பிப்ரவரி 2026 8:05:21 PM (IST)
தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய வழக்குகளில் சம்பந்தப்பட்ட இருவர் இன்று தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய பாலியல் வன்கொடுமை வழக்கில் சம்பந்தப்பட்ட தூத்துக்குடியைச் சேர்ந்த விஜயகுமார் (26) மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலைய மற்றொரு போக்சோ வழக்கில் சம்பந்தப்பட்ட இசக்கிமுத்து (45) ஆகிய இருவர் மீது தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் (1982) கீழ் நடவடிக்கை எடுக்க தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சொர்ணராணி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
அதன்பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை. சிலம்பரசன் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் பேரில் மேற்படி 2 பேரையும் இன்று (08.02.2026) தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நகைகளுக்காக மாமியாரை மிதித்துக் கொன்ற மருமகன் கைது: தூத்துக்குடியில் பயங்கரம்!
ஞாயிறு 8, பிப்ரவரி 2026 7:33:32 PM (IST)

மதுபோதையில் வாகனத்தை இயக்கியவர் கைது!
ஞாயிறு 8, பிப்ரவரி 2026 7:26:08 PM (IST)

தூத்துக்குடி திருவிக நகர் சக்திபீடத்தில் இளநீர் அபிஷேகம் : விவசாயம் வளம்பெற சிறப்பு வழிபாடு!
ஞாயிறு 8, பிப்ரவரி 2026 4:10:51 PM (IST)

பிப்.12 பொதுவேலைநிறுத்தம்: தூத்துக்குடியில் பிரச்சார இயக்கம் தொடங்கியது!
ஞாயிறு 8, பிப்ரவரி 2026 2:22:44 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊர்க்காவல் படைக்கு ஆட்சேர்ப்பு: எஸ்பி சிலம்பரசன் அறிவிப்பு
ஞாயிறு 8, பிப்ரவரி 2026 9:54:19 AM (IST)

தூத்துக்குடி மழை பாதிப்பில்லா மாநகராக மாற்றம்: மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!
ஞாயிறு 8, பிப்ரவரி 2026 9:12:34 AM (IST)









