» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நகைகளுக்காக மாமியாரை மிதித்துக் கொன்ற மருமகன் கைது: தூத்துக்குடியில் பயங்கரம்!
ஞாயிறு 8, பிப்ரவரி 2026 7:33:32 PM (IST)
தூத்துக்குடியில் நகைத் தகராறில் மாமியாரைத் தள்ளிவிட்டு, காலால் கழுத்தை மிதித்துக் கொடூரமாகக் கொலை செய்த மருமகனைப் போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி அத்திமரப்பட்டி வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் பாப்பா (75). இவரது கணவர் செல்லச்சாமி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், பாப்பா தனியாக வசித்து வந்தார். இவருக்கு நான்கு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இதில் 4-வது மகள் சுப்புராணி என்பவரை முத்தையாபுரம் ராஜீவ் நகரைச் சேர்ந்த கார் ஓட்டுநர் லிங்கதுரைக்கு (43) திருமணம் செய்து கொடுத்திருந்தனர்.
இந்நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சுப்புராணி உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். நேற்று இரவு மாமியார் பாப்பாவின் வீட்டுக்குச் சென்ற லிங்கதுரை, தனது மனைவி அணிந்திருந்த நகைகளைத் தருமாறு கேட்டுத் தகராறு செய்துள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த லிங்கதுரை பாப்பாவைக் கீழே தள்ளிவிட்டு, காலால் அவரது கழுத்தை நெரித்ததாகக் கூறப்படுகிறது.
இதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டுப் பலத்த காயமடைந்த பாப்பாவை, அக்கம் பக்கத்தினர் மீட்டுத் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்குச் சிகிச்சை பலனின்றி இன்று மாலை அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து முத்தையாபுரம் காவல் ஆய்வாளர் கிங்ஸ்லி தேவானந்த் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
தலைமறைவாக இருந்த மருமகன் லிங்கதுரையைக் கைது செய்த போலீசார்ர், அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவி இறந்த ஒரு மாதத்திலேயே நகைகளுக்காக மாமியாரைக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் தடுப்பு காவல் சட்டத்தில் 2பேர் கைது!
ஞாயிறு 8, பிப்ரவரி 2026 8:05:21 PM (IST)

மதுபோதையில் வாகனத்தை இயக்கியவர் கைது!
ஞாயிறு 8, பிப்ரவரி 2026 7:26:08 PM (IST)

தூத்துக்குடி திருவிக நகர் சக்திபீடத்தில் இளநீர் அபிஷேகம் : விவசாயம் வளம்பெற சிறப்பு வழிபாடு!
ஞாயிறு 8, பிப்ரவரி 2026 4:10:51 PM (IST)

பிப்.12 பொதுவேலைநிறுத்தம்: தூத்துக்குடியில் பிரச்சார இயக்கம் தொடங்கியது!
ஞாயிறு 8, பிப்ரவரி 2026 2:22:44 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊர்க்காவல் படைக்கு ஆட்சேர்ப்பு: எஸ்பி சிலம்பரசன் அறிவிப்பு
ஞாயிறு 8, பிப்ரவரி 2026 9:54:19 AM (IST)

தூத்துக்குடி மழை பாதிப்பில்லா மாநகராக மாற்றம்: மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!
ஞாயிறு 8, பிப்ரவரி 2026 9:12:34 AM (IST)









