» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பிப்.12 பொதுவேலைநிறுத்தம்: தூத்துக்குடியில் பிரச்சார இயக்கம் தொடங்கியது!
ஞாயிறு 8, பிப்ரவரி 2026 2:22:44 PM (IST)

தூத்துக்குடியில், பிப்ரவரி 12-ஆம் தேதி நடைபெறவுள்ள அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தை ஆதரித்து பிரச்சார இயக்கம் தொடங்கியது.
மத்திய அரசின் விவசாய மற்றும் தொழிலாளர் விரோதக் கொள்கைகளைக் கண்டித்து, பிப்ரவரி 12-ஆம் தேதி நடைபெறவுள்ள அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தை ஆதரித்து, தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் கடந்த பிப்ரவரி 4 முதல் தீவிரப் பிரச்சார இயக்கம் நடைபெற்று வருகிறது.
இன்று காலை 8 மணிக்கு தூத்துக்குடி ஆல்பட் அண்ட் கோ சந்திப்பில் இந்தப் பிரச்சார இயக்கம் தொடங்கியது. தொழிலாளர் முன்னேற்ற பேரவை (LPF) மாவட்ட செயலாளர் சுசி ரவீந்திரன் பிரச்சாரத்தைத் துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து திரேஷ்புரம் மற்றும் ஒன்றாம் கேட் ஆகிய பகுதிகளில் பொதுமக்களிடமும் தொழிலாளர்களிடமும் ஆதரவு திரட்டப்பட்டது.
இந்தப் பிரச்சாரத்தில் பல்வேறு தொழிற்சங்க மற்றும் விவசாய அமைப்புகளின் நிர்வாகிகள் எல்பிஎஃப் பி. முருகன், கருப்பசாமி, சிஐடியு பேச்சிமுத்து, ரசல் அப்பாதுரை, சிவபெருமாள், காசி, சங்கரன், ரவி தாக்கூர், ஏஐடியுசி பாலசிங்கம், சுப்ரமணியன், ஐஎன்டியுசி: ராஜகோபாலன், பால்ராஜ், ஸ்டீபன், ஏஐசிசிடியூ சகாயம், மின்னல் அம்சத், சிவராமன், ஐக்கிய விவசாய முன்னணி: ரவீந்திரன், புவிராஜ். திரளாகப் பங்கேற்றனர்:
இன்று மாலை சிதம்பர நகரில் நடைபெறும் பிரச்சார இயக்கத்தில் அனைத்து தொழிற்சங்கங்களின் தலைவர்களும், ஐக்கிய விவசாய முன்னணியின் முக்கியத் தலைவர்களும் பங்கேற்க உள்ளனர். நாளை காலை 8 மணிக்கு புதுக்கோட்டையில் தொடங்கும் பிரச்சாரப் பயணம், புதுக்கோட்டை, சாயர்புரம், திருவைகுண்டம், பேய்குளம், சாத்தான்குளம், உடன்குடி, பரமன்குறிச்சியில் நிறைவு பெறுகிறது.
மத்திய அரசின் கொள்கைகளால் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள், விவசாயிகள், வணிகர்கள் மற்றும் தொழில் முனைவோர் அனைவரும் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு முழு ஆதரவு அளிக்க வேண்டும் எனத் தலைவர்கள் கேட்டுக்கொண்டனர். குறிப்பாக, பிப்ரவரி 12 அன்று வணிகர்கள் அனைவரும் கடையடைப்பு செய்து இந்த வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் தடுப்பு காவல் சட்டத்தில் 2பேர் கைது!
ஞாயிறு 8, பிப்ரவரி 2026 8:05:21 PM (IST)

நகைகளுக்காக மாமியாரை மிதித்துக் கொன்ற மருமகன் கைது: தூத்துக்குடியில் பயங்கரம்!
ஞாயிறு 8, பிப்ரவரி 2026 7:33:32 PM (IST)

மதுபோதையில் வாகனத்தை இயக்கியவர் கைது!
ஞாயிறு 8, பிப்ரவரி 2026 7:26:08 PM (IST)

தூத்துக்குடி திருவிக நகர் சக்திபீடத்தில் இளநீர் அபிஷேகம் : விவசாயம் வளம்பெற சிறப்பு வழிபாடு!
ஞாயிறு 8, பிப்ரவரி 2026 4:10:51 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊர்க்காவல் படைக்கு ஆட்சேர்ப்பு: எஸ்பி சிலம்பரசன் அறிவிப்பு
ஞாயிறு 8, பிப்ரவரி 2026 9:54:19 AM (IST)

தூத்துக்குடி மழை பாதிப்பில்லா மாநகராக மாற்றம்: மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!
ஞாயிறு 8, பிப்ரவரி 2026 9:12:34 AM (IST)









