» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மினிலாரியில் கடத்தப்பட்ட ரூ.10 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் : 5 பேர் கைது

திங்கள் 15, டிசம்பர் 2025 7:50:35 AM (IST)



ஆறுமுகநேரியில் மினிலாரியில் கடத்தப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்பிலான 400 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி கடலோர பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சிலர் கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்து. இதைதொடர்ந்து ஆறுமுகநேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வாசுதேவன் தலைமையில் போலீசார் நேற்று கடலோர காவல் சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது வேகமாக சந்தேகத்திற்கு இடமான முறையில் வந்த மினி லாரியை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அந்த மினிலாரியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, கூல் லிப், பான்பராக் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் 30 மூட்டைகளில் கடத்தி சென்றது தெரிய வந்தது. அந்த மூட்டைகளில் இருந்து ரூ.10லட்சம் மதிப்பிலான 400 கிலோ புகையிலை பொருட்களை மினிலாரியுடன் போலீசார் பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து இதை கடத்தி வந்த ஆறுமுகநேரி ராஜமன்ய புரம் ராஜபாண்டியன் மகன் சாந்தகுமார் (45), அதே பகுதியைச் சேர்ந்த துரைராஜ் மகன் அரிகிருஷ்ணன்(48), காசிராஜன் மகன் சங்கர் (34), கோபால்சாமி மகன் மகாலிங்கம் (37), உடன்குடி அருகே உள்ள கொட்டங்காடு ஜெயபாண்டியன் மகன் வசிகரன் (63) ஆகிய 5பேரையும் போலீசார் பிடித்தனர். இதுதொடர்பாக ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த 5பேரையும் கைது செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital


CSC Computer Education







Thoothukudi Business Directory