» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் : பார் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்!
வியாழன் 11, டிசம்பர் 2025 8:54:06 PM (IST)

தூத்துக்குடியில் காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி பார் உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளில் காலி பாட்டில்களை திரும்ப ஒப்படைக்கும் திட்டம் கடந்த இரண்டாம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது. மது பாட்டில்களை விற்பனை செய்யும் போது டாஸ்மாக் ஊழியர்கள் பாட்டிலில் ஸ்டிக்கர் ஒட்டி கூடுதலாக பத்து ரூபாய்க்கு விற்பனை செய்வர். மதுவை பயன்படுத்துவோர் பயன்படுத்திய பிறகு காலி பாட்டிலை ஸ்டிக்கருடன் டாஸ்மாக் பார் நடத்துபவரிடம் கொடுத்து பத்து ரூபாய் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது விதிமுறை.
இந்த திட்டம் அமுல்படுத்திய நாளிலிருந்து மதுவை பயன்படுத்துவோருக்கும், டாஸ்மாக் பார் நடத்துபவர்களுக்கும் இடையே வாக்குவாதம், சண்டை, மண்டை உடைப்பு என்று தொடர்ந்து நடந்து வருகிறது. பல இடங்களில் பிரச்சனை ஏற்பட்டவுடன் டாஸ்மாக் கடைகளை பூட்டி மது விற்பனையை நிறுத்தம் செய்யும் நிலைமையும் ஏற்பட்டது.
மேலும் பாட்டிலில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கரை மட்டும் கொடுத்துவிட்டு பத்து ரூபாய் கேட்பதாகவும் பாட்டிலுடன் ஸ்டிக்கரையும் சேர்த்து ஒப்படைத்தால் மட்டுமே பத்து ரூபாய் கொடுக்க முடியும் என்பதில் பார் ஊழியர்களுக்கும் மது பிரியர்களுக்கும் தொடர்ந்து பிரச்சினை ஏற்பட்டு வருவதால் இதற்கு ஒரு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி இன்று தூத்துக்குடி நகர் பகுதியில் சுமார் 30க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை பார்களும் திறக்கப்படவில்லை. இது தொடர்பாக டாஸ்மாக் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி பல்நோக்கு மருத்துவமனை மகப்பேறு மருத்துவமனையாக மாற்றம்: பாஜக கண்டனம்!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 8:06:42 PM (IST)

தூத்துக்குடியில் கஞ்சா வழக்கில் கைதான 2பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 6:52:59 PM (IST)

தூத்துக்குடியில் மாற்றுத் திறனாளிகள் தின விழா: அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 12:45:11 PM (IST)

நின்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து : டிரைவர் உயிரிழப்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:40:48 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 3,686 வழக்குகளுக்கு தீர்வு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:32:16 AM (IST)

பெண்ணை அடித்து உதைத்து 3 பவுன் செயின் பறிப்பு : கொள்ளையனுக்கு போலீசார் வலைவீச்சு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:30:36 AM (IST)










