» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாநகராட்சி மயானத்தில் குளம் போல் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற கோரிக்கை!
வியாழன் 11, டிசம்பர் 2025 8:46:53 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி மயானத்தில் குளம் போல் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் கடந்த 23ஆம் தேதி பெய்த கன மழையின் காரணமாக நகரின் பல்வேறு இடங்களில் வெள்ள நீர் தேங்கியது. பல இடங்களில் வெள்ள நீர் வடிந்துள்ளது. ஆனால், மழை விட்டு 10 தினங்கள் ஆகியும் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி மயானத்தில் தேங்கிய வெள்ளநீர், வடியாமல் குளம் போல் தேங்கியுள்ளது.
இதனால் உடல்களை புதைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி மாநகர் பகுதியில் உயிரிழந்தவர்களின் பெரும்பாலான உடல்கள் இங்குதான் புதைக்கவும், தகனமும் செய்யப்படும். வெள்ளநீர் சற்றும் வடியாததால் உயிரிழந்தவர்களின் உடல்களை புதைக்க முடியாமல் எரிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வெள்ள நீரை வெளியேற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி பல்நோக்கு மருத்துவமனை மகப்பேறு மருத்துவமனையாக மாற்றம்: பாஜக கண்டனம்!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 8:06:42 PM (IST)

தூத்துக்குடியில் கஞ்சா வழக்கில் கைதான 2பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 6:52:59 PM (IST)

தூத்துக்குடியில் மாற்றுத் திறனாளிகள் தின விழா: அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 12:45:11 PM (IST)

நின்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து : டிரைவர் உயிரிழப்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:40:48 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 3,686 வழக்குகளுக்கு தீர்வு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:32:16 AM (IST)

பெண்ணை அடித்து உதைத்து 3 பவுன் செயின் பறிப்பு : கொள்ளையனுக்கு போலீசார் வலைவீச்சு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:30:36 AM (IST)










