» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாநகராட்சி மயானத்தில் குளம் போல் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற கோரிக்கை!
வியாழன் 11, டிசம்பர் 2025 8:46:53 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி மயானத்தில் குளம் போல் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் கடந்த 23ஆம் தேதி பெய்த கன மழையின் காரணமாக நகரின் பல்வேறு இடங்களில் வெள்ள நீர் தேங்கியது. பல இடங்களில் வெள்ள நீர் வடிந்துள்ளது. ஆனால், மழை விட்டு 10 தினங்கள் ஆகியும் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி மயானத்தில் தேங்கிய வெள்ளநீர், வடியாமல் குளம் போல் தேங்கியுள்ளது.
இதனால் உடல்களை புதைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி மாநகர் பகுதியில் உயிரிழந்தவர்களின் பெரும்பாலான உடல்கள் இங்குதான் புதைக்கவும், தகனமும் செய்யப்படும். வெள்ளநீர் சற்றும் வடியாததால் உயிரிழந்தவர்களின் உடல்களை புதைக்க முடியாமல் எரிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வெள்ள நீரை வெளியேற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கொலை முயற்சி, கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய இருவர் குண்டர் சட்டத்தில் கைது
திங்கள் 2, மார்ச் 2026 8:23:14 PM (IST)

தாய்மைப் பருவத்தை தள்ளிப்போடாதீர்கள்: அமைச்சர் பி. கீதா ஜீவன் அறிவுரை!
திங்கள் 2, மார்ச் 2026 5:47:32 PM (IST)

நடமாடும் உழவர் சந்தை வாகனங்கள் : ஆட்சியர் க. இளம்பகவத் துவக்கி வைத்தார்!
திங்கள் 2, மார்ச் 2026 4:09:10 PM (IST)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழா தேரோட்டம் கோலாகலம்
திங்கள் 2, மார்ச் 2026 3:37:15 PM (IST)

வெள்ள நிவாரண நிதியை விடுவிக்க வேண்டும்: பெருங்குளம் பேரூராட்சித் தலைவர் கோரிக்கை!
திங்கள் 2, மார்ச் 2026 3:26:04 PM (IST)

தூத்துக்குடி தொகுதியை இரண்டாகப் பிரிக்க வேண்டும் : பரதர் குல அரசியல் உரிமை மீட்பு மாநாட்டில் தீர்மானம்
திங்கள் 2, மார்ச் 2026 3:13:50 PM (IST)










