» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சொத்துவரி முறைகேடு: தூத்துக்குடி மாநகராட்சி உதவி ஆணையர் கைது!

செவ்வாய் 12, ஆகஸ்ட் 2025 4:10:55 PM (IST)

மதுரை மாநகராட்சியில் ரூ.150 கோடி முறைகேடு வழக்கு தொடர்பாக  தூத்துக்குடி மாநகராட்சி உதவி ஆணையர் கைது செய்யப்பட்டுள்ளார். 

மதுரை மாநகராட்சியில் 5 மண்டலங்கள், 100 வார்டுகள் உள்ளன. இங்குள்ள வணிக வளாகங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட வரியைவிடக் குறைந்த அளவிலான வரி விதிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பான விசாரணையில், ரூ. 150 கோடி மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது தெரியவந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக மதுரை மாநகராட்சியில் பணியாற்றியவரும், தற்போது தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டல உதவி ஆணையராக பணியாற்றி வரும் சுரேஷ் குமார் என்பவரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education






Arputham Hospital



Thoothukudi Business Directory