» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூர் கோயிலில் மூத்த குடிமக்கள் தரிசனம் வழிமுறைகள் அறிவிப்பு

வியாழன் 7, ஆகஸ்ட் 2025 10:50:54 AM (IST)



திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தரிசனத்திற்கான வழிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் மூத்த குடிமக்கள் (60 வயதுக்கு மேற்பட்டவர்கள்) மற்றும் மாற்றுத்திறனாளிகள் மட்டும் செல்லும் வழியில் 60 வயது முதல் 70 வயது வரையுள்ள மூத்த குடிமக்களை பொறுத்தவரை அவர்கள் மட்டுமே தரிசனத்திற்கு செல்ல அனுமதிக்கப்படுவர்.  70 வயது மேற்பட்ட மூத்தகுடி மக்களுடன் மட்டுமே துணைக்கு ஒருவர் அனுமதிக்கப்படுவர். 

மூத்த குடிமக்கள் தங்களது வயதிற்கான ஆதாரமாக ஆதார் அடையாள அட்டை கட்டாயம் காண்பிக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் அவர்களுக்கு அரசால் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை காண்பிக்க வேண்டும். மூத்த குடிமக்கள் வரிசையில் பக்தர்கள் காலை 07.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று திருக்கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education





Arputham Hospital



Thoothukudi Business Directory