» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் : ஆட்சியர் ஆலோசனை
திங்கள் 28, ஜூலை 2025 9:04:44 PM (IST)

தூத்துக்குடியில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தலைமையில் குழுக் கூட்டம் நடைபெற்றது
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று 2025 - 2026 ஆம் ஆண்டு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுவது தொடர்பாக மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஆட்சியர் தெரிவித்ததாவது: முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2025-26ஆம் ஆண்டுக்கான, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், பொது மக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளர்கள் என ஐந்து பிரிவுகளில் ஆண் பெண் இருபாலரும் பங்கேற்கும் வகையில், 25 வகையான விளையாட்டுகளும், மண்டல அளவில் 7 வகையான விளையாட்டுகளும், மாநில அளவில் மொத்தமாக 37 வகையான விளையாட்டுகளும் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் விளையாட்டு வீரர் / வீராங்கனைகள் அனைவரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளம் https:cmtrophy.sdat.in / www.sdat.tn.gov.in வாயிலாக வீரர் / வீராங்கனைகளின் குழு மற்றும் தனி நபர்களின் அனைத்து விவரங்களை பதிவு செய்திட வேண்டும். பதிவு செய்த வீரர் / வீராங்கனைகள் மட்டுமே கலந்து கொள்ள இயலும். இணையதளத்தில் 17.07.2025 முதல் 16.08.2025 பிற்பகல் 6.00 மணி வரை மட்டுமே பதிவு செய்திடலாம்.
முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் 22.08.2025 முதல் 12.09.2025 வரை நடைபெறவுள்ளது. இப்போட்டிகளில் கலந்து கொள்வதற்கு https:cmtrophy.sdat.in / www.sdat.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை போட்டிகளில் கலந்து கொள்ளும் போது கொண்டு வருதல் வேண்டும்.
மாநில அளவில் தனிநபர் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.1 இலட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.75 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும். குழு போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக தலா ரூ.75 ஆயிரமும், இரண்டாம் பரிசாக தலா ரூ.50 ஆயிரமும், மூன்றாம் பரிசாக தலா ரூ.25 ஆயிரமும் பரிசாக வழங்கப்பட உள்ளது.
மாவட்ட மற்றும் மண்டல அளவிலான தனி நபர் போட்டிகள் / குழு போட்டிகளில் வெற்றி பெறும் வீரர் / வீராங்கனைகளுக்கு முதல் பரிசாக தலா ரூ.3000, இரண்டாம் பரிசாக தலா ரூ. 2,000, மூன்றாம் பரிசாக தலா ரூ.1000 வழங்கப்படும். இப்போட்டிகளில் வழங்கப்படும் சான்றுகள் மூலம் உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் சலுகைகளும் பெற இயலும்.
தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 12 வயது முதல் 19 வயது வரை உள்ள பள்ளி மாணாக்கர்களுக்கும், 17 வயது முதல் 25 வயது வரை கல்லூரி மாணாக்கர்களுக்கும், 15 வயது முதல் 35 வயது வரை பொதுப் பிரிவினருக்கும், அனைத்து வயது மாற்றுத்திறனாளிகளுக்கும் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. போட்டிகளில் பங்கேற்க முன்பதிவு செய்திட கடைசி நாள். 16.08.2025 பிற்பகல் 6.00 மணி வரை.
எனவே விளையாட்டில் ஆர்வம் உள்ள அனைவரும் தவறாமல் https://sdat.tn.gov.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது. தாங்களாகவோ, தங்கள் பள்ளி, கல்லூரி மூலமாகவோ முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மாவட்ட விளையாட்டு அரங்கம், ஜார்ஜ் ரோடு, தூத்துக்குடி – 628 001. தொலைபேசி எண் - 0461-2321149 / 7401703508 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சேதுராமலிங்கம், மாவட்ட விளையாட்டு அலுவலர் சு.அன்தோனி அதிர்ஷ்டராஜ், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சாந்தி மற்றும் அரசு துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பைக் மீது கார் மோதியதில் எலெக்ட்ரிசியன் பலி: தூத்துக்குடியில் பரிதாபம்!!
வியாழன் 18, டிசம்பர் 2025 11:39:17 AM (IST)

தூத்துக்குடியில் ரூ.1 கோடி கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது - மேலும் மூவருக்கு வலைவீச்சு!
வியாழன் 18, டிசம்பர் 2025 11:26:04 AM (IST)

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 30 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை
வியாழன் 18, டிசம்பர் 2025 10:30:16 AM (IST)

ரயில் பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் : அமைச்சர் கீதா ஜீவன் தகவல்
வியாழன் 18, டிசம்பர் 2025 10:15:07 AM (IST)

தூத்துக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் பணியிட மாற்றம்
புதன் 17, டிசம்பர் 2025 8:52:10 PM (IST)

சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்தவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை!
புதன் 17, டிசம்பர் 2025 8:01:14 PM (IST)










