» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குலசை தசரா திருவிழா: பக்தர்களின் விரதம் ஜூலை 25ம் தேதி தொடக்கம்!

திங்கள் 14, ஜூலை 2025 11:06:33 AM (IST)

குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் 101 நாள் விரதம் வருகிற 25ஆம் தேதி தொடங்குகிறது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டினத்தில் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக நடைபெறும். திருவிழாவை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வர். நடப்பாண்டில் தசரா பெரும்திருவிழா வருகிற செப்.23ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) அன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 

தசரா திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து காளி, அம்மன், சிவன், கிருஷ்ணா், முருகன், விநாயகர் போன்ற சாமி வேடங்கள் மற்றும் குறவன், குறத்தி, போலீஸ், குரங்கு, கரடி, சிங்கம், புலி போன்ற பல்வேறு வேடங்கள் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். காளி வேடம் அணிபவர்கள் 41 நாள்களுக்கு மேலாக விரதம் இருக்க தொடங்குவார்கள். பெரும்பாலும் மற்ற வேடம் அணிபவர்கள் கொடியேறும் நாள் அன்று மாலை அணிந்து 11 நாள் விரதம் இருப்பர். 

இந்த நிலையில், குலசை முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழாவிற்கு 101 நாள் விரதம் வருகிற 25ஆம் தேதி தொடங்குகிறது. மேலும், 51 நாள் விரதம் 14.08.2025 (வியாழக்கிழமை), 48 நாள் விரதம் 17.08.2025 (ஞாயிற்றுக்கிழமை), 41 நாள் விரதம் 24.08.2025 (ஞாயிற்றுக்கிழமை), 31 நாள் விரதம் 03.09.2025 (புதன்கிழமை), 21 நாள் விரதம் 13.09.2025(சனிக்கிழமை), 11 நாள் விரதம் 23.09.2025(செவ்வாய்க்கிழமை) தொடங்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital


CSC Computer Education



Thoothukudi Business Directory