» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
டாஸ்மாக் கடை முன் வாலிபர் வெட்டிக்கொலை : காவல் நிலையம் முன் உறவினர்கள் போராட்டம்!
ஞாயிறு 29, ஜூன் 2025 9:58:52 AM (IST)
வல்லநாடு அருகே டாஸ்மாக் கடை முன் வாலிபரை வெட்டிக் கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு பகுதியைச் சேர்ந்தவர் ஈனமுத்து மகன் முருகேஷ் (28). கூலி தொழிலாளியான இவர் நேற்று இரவில் வல்லநாட்டை அடுத்த பாறைகாடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு நடந்து சென்றார். அப்போது அங்கு அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த மர்மநபர்கள் திடீரென்று முருகேஷை சுற்றி வளைத்து சரிமாரியாக வெட்டினர்.
இதில் தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் அந்த கும்பல் தப்பி சென்றது. பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த பயங்கர கொலை சம்பவத்தைப் பார்த்த அப்பகுதியினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து முறப்பநாடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே முருகேஷின் உறவினர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் முருகேஷின் உடலை தூக்கிச் சென்று, முறப்பநாடு காவல் நிலையம் முன்பு வைத்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். முருகேஷை கொலை செய்த கொலையாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் அவர்கள் கலைந்து செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாய் குறுக்கே வந்ததால் ஆட்டோ கவிழ்ந்து விபத்து : 10 மாணவிகள் காயம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 10:17:22 AM (IST)

தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல தேர்தலில் 100% வெற்றி : எஸ்டிகே ராஜன் அணியினர் பேட்டி
திங்கள் 15, டிசம்பர் 2025 8:04:02 AM (IST)

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பள்ளி ஆசிரியர் கைது
திங்கள் 15, டிசம்பர் 2025 7:52:26 AM (IST)

மினிலாரியில் கடத்தப்பட்ட ரூ.10 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் : 5 பேர் கைது
திங்கள் 15, டிசம்பர் 2025 7:50:35 AM (IST)

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் சுதேசி திருவிழா டிச. 26இல் தொடக்கம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 7:32:18 AM (IST)

திருச்செந்தூரில் 6 அடி ஆழத்துக்கு கடல் அரிப்பு
திங்கள் 15, டிசம்பர் 2025 7:28:04 AM (IST)










