» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சாலையில் நடந்து சென்றபோது பைக் மோதி ஒருவர் பலி

வெள்ளி 27, ஜூன் 2025 10:30:45 AM (IST)

தூத்துக்குடியில் சாலையில் நடந்து சென்றபோது பைக் மோதி படுகாயம் அடைந்த ஒருவர் பரிதாபமாக இறந்தார்.  

தூத்துக்குடி கோரம்பள்ளம் காலங்கரை பகுதியைச் சேர்ந்தவர் முனியாண்டி மகன் தெய்வநாயகம் (55), இவர் கிணற்றுக்கு உறை இறக்கும் தொழில் செய்து வருகிறார். நேற்று தூத்துக்குடி டேவிஸ்புரம் ரோட்டில் நடந்து சென்றபோது எதிரே வந்த ஒரு பைக் இவர் மீது மோதியது. 

இதில் பலத்த காயம் அடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தாளமுத்து நகர் இன்ஸ்பெக்டர் அருளப்பன் வழக்குப் பதிந்து, பைக்கை ஓட்டி வந்த எம்ஜிஆர் நகரை சேர்ந்த முகமது மகன் அபுதீன் என்பவரை பிடித்து விசாரித்து வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital



CSC Computer Education



Thoothukudi Business Directory