» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வந்த பெண்!

திங்கள் 23, ஜூன் 2025 11:21:01 AM (IST)



தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் பெண் ஒருவர் மனு அளிக்க வந்தார். 

தூத்துக்குடி மாவட்டம் செய்யதுங்கநல்லூர் அருகே உள்ள கால்வாய் கிராமத்தைச் சேர்ந்த செல்வி என்பவரின் கணவரை சில வருடங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். இதில் முக்கிய சாட்சியாக செல்வி இருப்பதால் அவருக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனை அடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில் செல்விக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் தனக்கு வாழ்வாதாரம் இழந்து வறுமையில் வாடுவதால் தனக்கு ஏதாவது அரசு வேலை வேண்டும் என்று கூறி செல்வி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வந்து மாவட்ட வருவாய் அலுவலரிடம் வேலைவாய்ப்பு கேட்டு செல்வி கோரிக்கை மனு அளித்து சென்று உள்ளார். மூன்றாம் வகுப்பு வரை தாம் படித்துள்ளதாகவும் தன்னுடைய வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தனக்கு வேலை வழங்க வேண்டும் என்று செல்வி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital



CSC Computer Education






Thoothukudi Business Directory