» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தங்கம் விலையை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும் : விஸ்வகர்மா சங்கம் தீர்மானம்

புதன் 18, ஜூன் 2025 4:15:08 PM (IST)



தங்கம் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஸ்வகர்மா நகை தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. 

தூத்துக்குடியில் விஸ்வகர்மா நகை தொழிலாளர் சங்கத்தின் 48வது ஆண்டு விழா மற்றும் மகாசபை கூட்டம் சிவன் கோயில் தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவிற்கு தலைவர் முனியசாமி தலைமை தாங்கினார். கேஎஸ்பிஏ மகாராஜன் வரவேற்று பேசினார். சங்க வரவு செலவு கணக்குகளை பொருளாளர் செல்வகுமார் தாக்கல் செய்தார். 

தொடர்ந்து விஸ்வகர்மா மாணவ மாணவிகள் மேற்படிப்பு படிப்பதற்காக கல்வி உதவித் தொகையை ஆலோசகர் பலவேச கார்த்திகேயன் வழங்கினார். இக்கூட்டத்தில், தினமும் தங்க நகைகள் விலை ஏற்றத்தை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும். நகை தொழிலாளர்களை பாதுகாக்க அரசு மானியத்துடன் கடன் உதவி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 

தொடர்ந்து அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை மற்றும் சர்க்கரை நோய், ரத்த அழுத்த பரிசோதனை நடத்தப்பட்டது. பரிசோதனை அடிப்படையில் கண் கண்ணாடி வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் துணைச் செயலாளர் ஸ்ரீதர் வெங்கடேஷ், செயலாளர் மகாராஜன், முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital

CSC Computer Education







Thoothukudi Business Directory