» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சாலை விபத்தில் கூட்டுறவு வங்கி விற்பனையாளர் சாவு

செவ்வாய் 17, ஜூன் 2025 8:43:52 AM (IST)

கோவில்பட்டியில் சாலையில் நடந்து சென்றபோது வாகனம் மோதி பலத்த காயமடைந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி விற்பனையாளர் உயிரிழந்தார்.

திருவேங்கடம் வட்டம், நடுவப்பட்டி நடுத்தெருவைச் சேர்ந்த ராமர் மகன் சந்திரன் (59). தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் விற்பனையாளராக வேலை செய்து வந்த இவர் நேற்று முன்தினம் கோவில்பட்டிக்கு வந்திருந்தாராம்.

இந்நிலையில் இரவு கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் அருகே நடந்து சென்றபோது, அவர் மீது அடையாளம் தெரியாத வாகன மோதியதில் பலத்த காயமடைந்த சந்திரன் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின் தீவிரசிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு அவர் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education





Arputham Hospital




Thoothukudi Business Directory