» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

விவசாயியை இரும்புக் கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் : இளைஞர் கைது

செவ்வாய் 17, ஜூன் 2025 8:39:32 AM (IST)

கோவில்பட்டி அருகே முன்விரோதம் காரணமாக விவசாயியை இரும்புக் கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே வடக்குப்பட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் ஆதிமூலம் மகன் விவசாயி ரவிக்குமார் (27). இவருக்கும் அதே பகுதி காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (67), அவரது மகன் ராஜசேகர் (32) ஆகியோருக்கு இடையே இட பிரச்னை தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதாம்.

இந்நிலையில் இம்மாதம் 11ஆம் தேதி ரவிக்குமார் தனது விவசாய நிலத்தில் செடிக்கு மருந்து அடித்துக் கொண்டு இருந்தாராம். அப்போது அதன் அருகே பாலகிருஷ்ணன் குடும்பத்தினருக்கு சொந்தமான தோட்டத்துக்கு பாலகிருஷ்ணனும், அவரது மகன் ராஜசேகரும் சென்றபோது, ரவிக்குமார் தனியாக நிற்பதை பார்த்து அங்கு சென்ற இருவரும் இரும்புக் கம்பியால் ரவிக்குமாரை தாக்கினார்களாம்.

அப்போது ரவிக்குமாரின் சப்தம் கேட்டு, உறவினர்கள் தோட்டத்துக்கு வந்ததை பார்த்ததும், தந்தை, மகன் இருவரும் தப்பியோடி விட்டனர். காயமடைந்த ரவிக்குமார் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை அளித்த புகாரின் பேரில் மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து ராஜசேகரை நேற்று கைது செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital


CSC Computer Education






Thoothukudi Business Directory