» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் கண்மாயில் மூழ்கி பெண் பரிதாப சாவு

திங்கள் 16, ஜூன் 2025 9:35:43 PM (IST)

தூத்துக்குடியில் கண்மாயில் மூழ்கி பெண் பரிதாபமாக இறந்தார் 

தூத்துக்குடி மீளவிட்டான் சில்வர் புரத்தைச் சேர்ந்தவர் காசி மனைவி சாந்தா (56), இவர் சிறிது மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் தினசரி இதற்காக மாத்திரை சாப்பிட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இன்று காலை வீட்டை விட்டு வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. அவரை குடும்பத்தினர் தேடி வந்தனர்.

இந்நிலையில், அங்குள்ள கண்மாய் நீரில் மூழ்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து சிப்காட் காவல் நிலையத்தில் அவரது மகன் செல்வக்குமார் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சைரஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital


CSC Computer Education




Thoothukudi Business Directory