» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

காயல்பட்டினத்தில் ரூ.5.10 கோடி மதிப்பில் குடிநீர் திட்ட பணிகள்: கனிமொழி எம்பி துவக்கி வைத்தார்

திங்கள் 16, ஜூன் 2025 5:15:21 PM (IST)



காயல்பட்டினம் நகராட்சியில் ரூ.5.10 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட இருக்கும் குடிநீர் சுத்திகரிப்பு படுகை கட்டுமானப் பணிகளை கனிமொழி எம்பி துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி, காயல்பட்டினம் நகராட்சி பகுதியின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் நகராட்சி மூலதன மானிய நிதி மற்றும் இயக்குதல் பராமரிப்பு நிதியின் கீழ் ரூ.5 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட இருக்கும் குடிநீர் சுத்திகரிப்பு படுகை கட்டுமானப் பணிகளை கருணாநிதி எம்பி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். 

அதனைத் தொடர்ந்து காயல்பட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்ச்சியில் மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளருமான அனிதா இராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education



Arputham Hospital





Thoothukudi Business Directory