» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மக்கள் குறை களையும் கூட்டத்தில் ரூ.40.39 இலட்சம் நலதிட்ட உதவிகள்: ஆட்சியர் வழங்கினார்!

திங்கள் 16, ஜூன் 2025 4:07:22 PM (IST)



தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறை களையும் நாள் கூட்டத்தில் 240 பயனாளிகளுக்கு ரூ.40.39 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் திங்கள்கிழமை மக்கள் குறை களையும் நாள் கூட்டம் இன்று (16.06.2025) நடைபெற்றது. பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல் உத்தரவு, வரன்முறைப்படுத்தி பட்டா, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு வேண்டி, தொழில் கடனுதவி, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 710 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. 

பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரியநடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்கள். முன்னதாக, மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 22 கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு அவர்களின் கோரிக்கைகளை கனிவுடன் கேட்டறிந்தார்.

அதனைத்தொடர்ந்து, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட 10 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு ரூ.89000/- மதிப்பலான மடக்கு சக்கர நாற்காலிகளையும், தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் திட்டத்தின் கீழ் சமூக தரவு கணக்கெடுப்புப் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக 210 களப்பணியாளர்களுக்கு ரூ.31.50 இலட்சம் மதிப்பிலான கையடக்க கணினிகளையும், மாவட்ட முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில், ஓய்வு பெற்ற முன்னாள் படைவீரர்கள் ‘முதல்வரின் காக்கும் கரங்கள்” திட்டத்தின் கீழ் சுயதொழில் தொடங்கி பயன்பெறும் வகையில் 10 நாட்கள் திறன் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி (EDII Training) பெற்ற 11 முன்னாள் படைவீரர்களுக்கு பயிற்சி சான்றிதழ்களையும், 

இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டு மீட்க இயலாத நிலையிலுள்ள தருவைகுளத்தைச் சேர்ந்த விசைப்படகு உரிமையாளருக்கு முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியிலிருந்து ரூ.8 இலட்சம் நிவாரணத் தொகைக்கான காசோலையை பயனாளியிடம் வழங்கினார்.

மேலும், தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வட்டம் கீழஅரசடி கடலோர கிராம மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக தூத்துக்குடி வ.உ.சி துறைமுக பொறுப்புக் கழகத்தின் சமூக பொறுப்பு நிதியின் கீழ் 8 பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்கள் என மொத்தம் 240 பயனாளிகளுக்கு ரூ.40 இலட்சத்து 39 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் பயனாளிகளுக்கு வழங்கினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இரவிச்சந்திரன், உதவி ஆட்சியர் (பயிற்சி) தி.புவனேஷ்ராம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சேதுராமலிங்கம், சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் ஹபிபூர் ரஹ்மான், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சாந்தி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education


Arputham Hospital





Thoothukudi Business Directory