» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

லாரி சக்கரத்தில் சிக்கி புரோட்டா மாஸ்டர் பலி

திங்கள் 16, ஜூன் 2025 3:18:57 PM (IST)

எட்டயபுரத்தில் லாரியை பின்னோக்கி எடுத்தபோது, சாலையோர தடுப்பு சுவரில் உறங்கிய புரோட்டா மாஸ்டர், டயரில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். 

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள குமரெட்டியாபுரம் கிராமத்தைச் சேர்ந்த அழகர்சாமி மகன் விநாயகமூர்த்தி (27) இவர் மதுரையில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று காலையில் வேலைக்கு சென்று விட்டு இரவு எட்டயபுரம் வந்தவுடன் பைபாஸில் சாலையோர தடுப்பு சுவரில் உறங்கியுள்ளார்.

அதன் அருகே மதுரையிலிருந்து தூத்துக்குடி செல்லும் டேங்கர் லாரி நின்று கொண்டிருந்தது. இந்நிலையில் இன்று அதிகாலையில் டேங்கர் லாரி டிரைவர் தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா வாசுதேவநல்லூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த வெள்ளையன் மகன் செல்வ முருகன் (41) வண்டியை நகற்றும் பொழுது எதிர்பாராத விதமாக லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதுகுறித்து தகவல் அறிந்து எட்டயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விநாயகமூர்த்தியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital


CSC Computer Education





Thoothukudi Business Directory