» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க குவிந்த மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பு

திங்கள் 16, ஜூன் 2025 3:16:35 PM (IST)



தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுக்க ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கள் கிழமைகளில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. கடந்த வாரம் திங்கட்கிழமை அரசு விடுமுறை என்பதால் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறவில்லை. இதனால் இன்று ஏராளமான பொதுமக்கள் மனு கொடுக்க குவிந்தனர். இதனால் மனு பதிவு செய்யும் இடத்தில் நீண்ட வரிசை காணப்பட்டது. 

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்தனர். ஆனால் ஒரே ஒரு கவுன்டர் மட்டும் இயக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் வெகுநேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து மனுக்களை பதிவு செய்தனர். இதனால் ஆண், பெண், முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். பொதுமக்கள் நலனுக்காக கூடுதல் கவுண்டர்களை திறக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





CSC Computer Education


Arputham Hospital



Thoothukudi Business Directory