» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பஸ் நிலையத்தில் கழிப்பறையை பராமரிக்க வேண்டும் : சமூக ஆர்வலர் கோரிக்கை!

செவ்வாய் 10, ஜூன் 2025 8:12:39 PM (IST)

தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் கழிவறையை முறையாக பராமரிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் கோரிக்கை விடுத்துள்ளார். 

தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் புதிதாக கட்டப்பட்டுள்ள கழிப்பறை சுத்தம் செய்யாமல் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மக்கள் அதிகமாக வந்து சென்றுவரக்கூடிய புதிதாக கட்டப்பட்டுள்ள பழைய பேரூந்து நிலையத்தில் உள்ள கழிப்பறை களை கண்காணிக்காமல், கவனிக்காமல் இருப்பது மிகவும் வருத்தத்துக்குரிய செயலாகும். 

மக்கள் அவசர நிலையில் கழிப்பறை பயன்படுத்தி  வருகின்றார்கள். நோய் தொற்று  பரவி மக்களை பாதிக்கும் முன்பாக சம்பந்தப்பட்ட நிர்வாகம் நேரில் பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனித உரிமை காப்பாளர் கூட்டமைப்பு இசக்கிமுத்து கோரிக்கை விடுத்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital


CSC Computer Education






Thoothukudi Business Directory