» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குறி சொல்பவரை கத்தியால் வெட்டியவர் கைது!

புதன் 4, ஜூன் 2025 11:20:00 AM (IST)

தூத்துக்குடியில் தொழிலில் நட்டம் ஏற்பட்டதால் குறி சொல்பவரை கத்தியால் வெட்டியவரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி சிவன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் மகன் மணிகண்டன் (42). இவர் கனகசபாபதி தெருவில் சந்தன மாரியம்மன் கோவில் வைத்து பூஜை செய்து குறி சொல்லி வருகிறார். இவரிடம்  இனிகோ நகர்  ஜேசையா மகன் அந்தோணி (44) என்பவர் குறி கேட்பது வழக்கமாம். 

இந்நிலையில், தனது தொழிலில் நஷ்டம் ஏற்படதற்கு மணிகண்டன்தான் காரணம் என்று அந்தோணி கருதியதால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.  இந்த நிலையில், இன்று குடிபோதையில் வந்த அந்தோணி,  மணிகண்டனை கத்தியால் வெட்டியுள்ளார். இதில் அவரது கை விரல் மற்றும் இடது கண்ணத்தில் காயம் ஏற்பட்டது. 

இதுகுறித்து புகாரின் பேரில் மத்தியபாகம் போலீசார் வழக்குப் பதிந்து அந்தோணியை கைது செய்தனர். இதனிடையே அந்தோணி தன்னைத் தானே கத்தியால் வெட்டிக் கொண்டு மணிகண்டன் தன்னை வெட்டியதாக நாடகம் ஆடியுள்ளார். காயம் அடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




CSC Computer Education

Arputham Hospital





Thoothukudi Business Directory